search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரசிம்ம அவதாரம்
    X

    நரசிம்ம அவதாரம்

    மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இந்த அவதாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
    மனித உடலும், சிங்கமுகமும் கொண்டு மகா விஷ்ணு எடுத்த அவதாரம் ‘நரசிம்ம அவதாரம்.’ இரண்யாசுரனை வராக அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு வதம் செய்தார்.

    அந்த இரண்யாசுரனின் சகோதரன் இரண்யகசிபு. தன் சகோதரனைக் கொன்றதால், மகாவிஷ்ணுவின் மீது தீராத பகை கொண்டிருந்தான். தன்னையே கடவுளாக அனைவரும் வழிபட வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனது மகனான பிரகலாதன், நாராயணரின் நாமங்களைச் சொல்லி, அவரையே இறைவனாக பாவித்து வழிபட்டான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொல்ல பலமுறை முயற்சித்தான். ஆனால் பிரகலாதனின் பக்தி, அவனை ஒவ்வொரு முறையும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக் கொண்டே இருந்தது. ஒரு முறை இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனிடம், “உன் இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதை நிரூபித்துக் காட்டு” என்று சவால் விடுத்தான்.

    பக்தனுக்காக தூணில் இருந்து நரசிம்ம அவதாரத்தில் வெளிப்பட்டார், மகா விஷ்ணு. பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்து, பிரகலாதனை ஆட்சியில் அமர்த்தினார்.

    Next Story
    ×