என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பகல் முழுவதும் நடைதிறப்பு
Byமாலை மலர்19 Nov 2018 6:13 AM GMT (Updated: 19 Nov 2018 6:13 AM GMT)
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். பொதுவாக கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக கற்பக விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். அதன்படி இந்த ஆண்டும் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை இந்த நடை திறப்பு நீடிக்கும் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் டிரஸ்டிகள் கோனாப்பட்டு பி.அருணாசலம் செட்டியார், அரிமளம் என்.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். பொதுவாக கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக கற்பக விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். அதன்படி இந்த ஆண்டும் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை இந்த நடை திறப்பு நீடிக்கும் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் டிரஸ்டிகள் கோனாப்பட்டு பி.அருணாசலம் செட்டியார், அரிமளம் என்.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X