search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அகல் விளக்கின் நவக்கிரக தத்துவம்
    X

    அகல் விளக்கின் நவக்கிரக தத்துவம்

    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.
    கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன. அது எப்படி? அறிந்து கொள்வோம்.

    அகல் விளக்கு - சூரியன்

    நெய்/எண்ணெய் - சந்திரன்

    திரி - புதன்

    எரியும் ஜூவாலை - செவ்வாய்

    கீழே விழும் ஜூவாலையின் நிழல் - ராகு

    ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு

    ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - கேது

    திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்ரன்

    தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி - சனி

    இதில் சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால், இன்பம் வந்து சேரும். ஆசை தான் நம்மை அழிக்கிறது. அந்த ஆசை தான் முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம். 
    Next Story
    ×