என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜோதிடமும் ஆடிப்பெருக்கும்...
Byமாலை மலர்2 Aug 2018 9:05 AM GMT
ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு.
‘சூரிய பகவான்’ பாரம்பரியத்தைக் குறிப்பவர். பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே.
‘சந்திர பகவான்’ என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம்.
‘புத பகவான்’ - கலைகளுக்கு அதிபதி. சித்ரான்ன நிவேதனம் இவருக்கு விசேஷம்.
ஆக, ஆடிப்பெருக்கன்று முக்கியமான இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும் ஜீவாதாரமான பயிர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
இன்றைய தின காவிரி வழிபாட்டால் அனைவருக்கும் மேலே சொன்ன மூன்று கிரகங்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கிறது.
என்னென்ன சீர்வரிசைப் பொருட்கள்?
தாலிப்பொட்டு, தான் அணிந்து கொண்ட பட்டு வஸ்திரம், தான் சூடிக்களைந்த மாலை, சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் போன்றவை. பெருமாளுக்கு முன் இவை அனைத்தும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்னர் காவிரியில் சேர்த்து விடுவார்கள் பட்டாச்சார்யார்கள். இப்படி சீர்வரிசைப் பொருட்களை அர்ப்பணிக்கின்ற வேளையில் கூடி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, ‘ரங்கா... ரங்கா’ கோஷத்தை எழுப்புவார்கள்.
ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே தன் தங்கைக்கு சீர் கொடுக்கின்ற காரணத்தால், பெரும்பாலானோர் தங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் சீர் கொடுக்கின்ற வழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இன்றைக்கும் இருந்து வருகிறது.
வீட்டில் இருந்தபடியும்...
காவிரிக்குச் சென்று ஆடிப்பெருக்கைக் கொண்டாட முடியவில்லையா? கவலை வேண்டாம். உங்களது இல்லங்களில் இருந்தபடியே இந்த ஆடிப்பெருக்கின் கோலாகலத்தை நீங்களும் ஆனந்தமாக அனுகலாம்.
கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தெய்வங்களை வணங்குவதில்லையா... அதுபோலத்தான்!
‘சூரிய பகவான்’ பாரம்பரியத்தைக் குறிப்பவர். பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே.
‘சந்திர பகவான்’ என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம்.
‘புத பகவான்’ - கலைகளுக்கு அதிபதி. சித்ரான்ன நிவேதனம் இவருக்கு விசேஷம்.
ஆக, ஆடிப்பெருக்கன்று முக்கியமான இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும் ஜீவாதாரமான பயிர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
இன்றைய தின காவிரி வழிபாட்டால் அனைவருக்கும் மேலே சொன்ன மூன்று கிரகங்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கிறது.
என்னென்ன சீர்வரிசைப் பொருட்கள்?
தாலிப்பொட்டு, தான் அணிந்து கொண்ட பட்டு வஸ்திரம், தான் சூடிக்களைந்த மாலை, சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் போன்றவை. பெருமாளுக்கு முன் இவை அனைத்தும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்னர் காவிரியில் சேர்த்து விடுவார்கள் பட்டாச்சார்யார்கள். இப்படி சீர்வரிசைப் பொருட்களை அர்ப்பணிக்கின்ற வேளையில் கூடி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, ‘ரங்கா... ரங்கா’ கோஷத்தை எழுப்புவார்கள்.
ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே தன் தங்கைக்கு சீர் கொடுக்கின்ற காரணத்தால், பெரும்பாலானோர் தங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் சீர் கொடுக்கின்ற வழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இன்றைக்கும் இருந்து வருகிறது.
வீட்டில் இருந்தபடியும்...
காவிரிக்குச் சென்று ஆடிப்பெருக்கைக் கொண்டாட முடியவில்லையா? கவலை வேண்டாம். உங்களது இல்லங்களில் இருந்தபடியே இந்த ஆடிப்பெருக்கின் கோலாகலத்தை நீங்களும் ஆனந்தமாக அனுகலாம்.
கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தெய்வங்களை வணங்குவதில்லையா... அதுபோலத்தான்!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X