search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேட்டூர் அணை நிரம்பியதால் 10 ஆண்டுகளுக்கு பிறகு களை கட்டும் ஆடிப்பெருக்கு விழா
    X

    மேட்டூர் அணை நிரம்பியதால் 10 ஆண்டுகளுக்கு பிறகு களை கட்டும் ஆடிப்பெருக்கு விழா

    கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் களை கட்டும். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.
    விவசாயத்தை செழித் தோங்க வைத்து தமிழக மக்களை வாழ வைக்கும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது ஆடி மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் விழாக்கள் நடந்தாலும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டா டப்படும்.

    நதிக்கரைகளில் வாழும் மக்கள் தங்களை வாழ வைக்கும் நதிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் படித்துறைகளில் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு ஆகியவைகளை வைத்து தண்ணீருக்கு பூஜை செய்து மஞ்சள் கயிறை அணிந்து கொள்வார்கள்.

    இது போல புது மண தம்பதியர் அன்றைய தினம் காவிரி கரையில் சிறப்பு வழிபாடுகள் செய்து புதிய தாலிக்கயிறு மாற்றி திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள். இதனால் மேட்டூர் அணை முதல் காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

    மேட்டூர் அணை வழக்கம் போல ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் போது காவரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இருக்கும், இதனால் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெறும்.

    கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் உரிய நேரத்தில் திறக்கப்பட வில்லை. ஆனால் மேட்டூர் அணையில் இருந்து ஆடிப் பெருக்கு விழாவை கொண்டாட 2 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.

    இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தை கடக்காது. இதனால் கடந்த சில வருடங்களாக ஆடிப்பெருக்கு விழா தண்ணீரின்றி களையிழந்து காணப்பட்டது. ஆடிப்பெருக்கு அன்று கும்பகோணம், திருவையாறு ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் இறைத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் புனித நீராடினர்.

    கடந்த 2007-ம் ஆண்டு ஆடிப்பண்டிகைக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    அணை நிரம்பிய தையடுத்து இந்தாண்டு ஜூலை 19-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரியின் மற்றும் கிளை ஆறுகளிலும் கடை மடை பகுதி வரை சென்றுள்ளது.

    இதனால் கடந்த 10 ஆண்டுகளாக களையிழந்திருந்த ஆடிப்பெருக்கு விழா இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் களை கட்டும். இதனால் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்வார்கள்.

    இதையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றிலும் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்து புனித நீராடுவார்கள். இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    மேலும் ஆடிப்பெருக்கு விழா அன்று மேட்டூர் காவிரியில் பக்தர்கள் அதிகம் குளிக்கும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரை தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×