search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செங்கோட்டில் முகரம் பண்டிகையையொட்டி தர்காவில் சந்தனக்கூடு விழா
    X
    திருச்செங்கோட்டில் முகரம் பண்டிகையையொட்டி தர்காவில் சந்தனக்கூடு விழா

    திருச்செங்கோட்டில் முகரம் பண்டிகையையொட்டி தர்காவில் சந்தனக்கூடு விழா

    முகரம் பண்டிகையையொட்டி, திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    முகரம் பண்டிகையையொட்டி, திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் உள்ள காஜா அகமது ஷா வலியுல்லா தர்கா ஷெரிப் 420-வது ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார்.

    பொருளாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். பள்ளி வாசலின் இமாம் ஜலாலுத்தீன் துவா செய்தார். தொடர்ந்து சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கனிபாய், நவாப் ஜான், கமால் மற்றும் ஜமாத்தார்கள்,

    இதயத்துல்லா, காஜா நசீமுதீன், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×