என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவிலுக்கு செல்ல 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் திறக்கப்படும்.
அதன்படி மாசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோவிலுக்கு செல்ல 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மாசி மாத பூஜைகள் முடிந்து வருகிற 17-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பின்பு உத்திர திருவிழாவுக்காக மார்ச் மாதம் 8-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும். உத்திர திருவிழா கொடியேற்றம் மார்ச் 9-ந் தேதி நடக்கிறது.
அதன்படி மாசி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின் போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர். தற்போது கோவிலுக்கு செல்ல 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மாசி மாத பூஜைகள் முடிந்து வருகிற 17-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பின்பு உத்திர திருவிழாவுக்காக மார்ச் மாதம் 8-ந் தேதி கோவில் நடை திறக்கப்படும். உத்திர திருவிழா கொடியேற்றம் மார்ச் 9-ந் தேதி நடக்கிறது.
மாசித்திருவிழா 5-ம் நாளான இன்று மாலை திருச்செந்தூர் கோவிலில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருநாளான 16-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி சுவாமி, அம்பாள் காலை, மாலையும் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
மாசித் திருவிழாவின் 5-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய பின்னர், குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.
12 நாட்கள் நடைபெற கூடிய இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளை மறுநாள் 7-ம் திருநாளன்று காலையில் வெற்றிவேர் சப்பரபவனியும், மதியம் சிவப்பு சாத்தியும், 8-ம் திருநாளன்று பச்சை சாத்தியும், 10-ம் திருநாளான 16-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 17-ந்தேதி தெப்பத்திருவிழா, 18-ந்தேதி யுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மாசித் திருவிழாவின் 5-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை)அதிகாலை 1 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய பின்னர், குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.
12 நாட்கள் நடைபெற கூடிய இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளை மறுநாள் 7-ம் திருநாளன்று காலையில் வெற்றிவேர் சப்பரபவனியும், மதியம் சிவப்பு சாத்தியும், 8-ம் திருநாளன்று பச்சை சாத்தியும், 10-ம் திருநாளான 16-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 17-ந்தேதி தெப்பத்திருவிழா, 18-ந்தேதி யுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்பட உள்ளதாக கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரில் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவலை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளேயே தெப்போற்சவம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளேயே தனிமையில் தெப்போற்சவம் நடக்கிறது. முதல் நாளான நேற்று உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், நெய் மற்றும் பிற வாசனை சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
தெப்போற்சவத்தில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜூ, கண்காணிப்பாளர் ரமேஷ்குமார், கோவில் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், முனிரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தெப்போற்சவத்தில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜூ, கண்காணிப்பாளர் ரமேஷ்குமார், கோவில் ஆய்வாளர்கள் ஜெயக்குமார், முனிரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
திருவிழாவையொட்டி நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை புனித செபஸ்தியார் தத்துக்கிராம நற்செய்தி பணித்திட்டம் சார்பில் நற்செய்தி கூட்டம் நடந்தது.
இன்று மாலை 5.45 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கான திருமுழுக்கு வழங்குதல், மாலை 5 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.
14-ந் தேதி கத்தோலிக்க சேவா சங்கம் சிறப்பிக்கும் பவளவிழா கொண்டாடும் திருப்பலியும், 17-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும். 18 -ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.
19-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், வாணவேடிக்கையும் நடக்கிறது.
20-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு குடும்பவிழாவான திருவிழா நிறைவு முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜி.ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அ.அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
12 ராசிக்காரர்களும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தடையில்லா வருமானத்தை பெற முடியும். அதைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
மேஷ ராசிக்காரர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.
ரிஷப ராசிக்காரர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வழியில் இருக்கும் பசுக்களுக்கு தானமாக ஏதாவது தீவனத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும். உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும்.
மிதுன ராசிக்காரர்கள் உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்க அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சைப் பயறு தானம் செய்து வரலாம். அது போல் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் கொடுத்து வழி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்கள் உங்கள் வீட்டில் வெளிப்புறமான இடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் மண் சட்டியில் தண்ணீரை எப்பொழுதும் நிரப்பி வையுங்கள். அதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தாகம் தீர்ந்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும். சிவன் கோவிலுக்கு திங்கள் கிழமையில் பசும்பால் வாங்கி அபிஷேகம் செய்து வரலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் இரவு தூங்கும் பொழுது தலைக்கு பக்கத்தில் ஒரு செம்பு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி வருமானம் பெருகும் என்பது ஐதீகம். கிழக்கு பகுதியில் செடிகள் வைத்திருந்தால் அந்த செடிகளுக்கு ஊற்றலாம் நல்ல பலன் கிடைக்கும். செம்பு அல்லது பித்தளை மட்டும் பயன்படுத்துவது உத்தமம்.
கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானுடைய பச்சை நிறத்தை புதன் கிழமைகளில் உடுத்திக் கொள்வது அதிர்ஷ்டத்தைத் தரும். புதனுடைய அனுகிரகம் இருந்தால் தான் வருமான தடைகள் நீங்கும். ஒரு சிறு கைகுட்டையாவது அன்றைய நாளில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்தாலும், வந்த வழியே சென்று விடும். இந்த சூழ்நிலை மாறி செல்வ செழிப்பு உண்டாக திங்கள் கிழமை தோறும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவிற்கு தானம் செய்யலாம்.
விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய வருமான ரீதியான பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி வரும் நாட்களில் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக, முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் மற்றும் கடலை பருப்பு நைவேத்தியம் செய்வது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் நிற உடை உடுத்தி, வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, படிக்கத் தெரியாதவர்கள் அதனை பாடல்கள் மூலம் ஒலிக்கச் செய்வது நன்மை தரும். பின்னர் ஐந்து முக குத்து விளக்கு ஒன்றில் தாமரை தண்டு திரியை போட்டு, நெய் தீபம் ஏற்றிவர வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும். பகைவர் தொல்லை நீங்கி செல்வ செழிப்பும் ஏற்படும்.
மகர ராசிக்காரர்கள் துளசிச் செடியை வளர்ப்பது யோகம் தரும். கட்டாயம் இதை செய்யுங்கள். துளசிச்செடி இல்லாதவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணை தீபம் ஏற்றி வரலாம். துளசி செடி வைத்திருப்பவர்கள் சனிக்கிழமைகளில் துளசி செடிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கும்.
கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் சனி பகவானை வணங்குவது மிகவும் விசேஷமானது. கோவிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நேராக நீர்க்காமல், ஒரு புறமாக நின்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து சனிக்கிழமையில் உங்களால் முடியும் பொழுது செய்து வந்தால் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது விசேஷமானது. உங்கள் ராசிக்கு குரு மற்றும் தட்சிணாமூர்த்தி செல்வ செழிப்பை கொடுப்பார்கள். அன்றைய நாளில் மஞ்சள் நிற உடை அல்லது மஞ்சள் கைக்குட்டையாவது கையில் வைத்துக் கொண்டு, இவர்களுக்கு மஞ்சள் நிற நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது யோகத்தை தரும்.
கன்னியாகுமரியில் அடுத்த மாதம் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராயநகரில் வெங்கடேச பெருமாள் கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் ஆலோசனைக்குழு துணைத்தலைவர்களாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த், வேலூரைச் சேர்ந்த லட்சுமணன் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் பிரபாகர் ரெட்டி மற்றும் உறுப்பினர்களாக ஆனந்தகுமார், கிருஷ்ணராவ், கார்த்திகேயன் உள்ளிட்ட 24 பேரை தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.
இவர்களுக்கான பதவி ஏற்பு விழா தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமை தாங்கினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி, புதிய உறுப்பினர்களுக்கான ஆணைகளை வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஓரிரு மாதங்களில் முழுமையாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை தியாகராயநகரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து வருகிற அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதேபோல், ராயப்பேட்டையில் உள்ள காலி இடத்திலும் கோவில் மற்றும் திருமண மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுமானத்திற்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 28-ந்தேதி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது.
மதுரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மைய வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கோவில் கட்டுவதற்காக கட்டிட கலைஞரை அடையாளம் காணுதல் மற்றும் திட்ட ஒப்புதலுக்கு நிறுவனத்திடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அரசு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஆண்டு இறுதியில் பணிகள் நிறைவடையும். சென்னை தீவுத்திடல் மற்றும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான முறையில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மக்களின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
கோவை மக்களின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 15-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு, 21-ந்தேதி கிராமசாந்தி, 22-ந் தேதி கொடியேற்றம், இரவு 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் அக்கினிச்சட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து 23-ந் தேதி புலி வாகனம், 24-ந் தேதி கிளி வாகனம், 25-ந் தேதி சிம்ம வாகனம், 26-ந் தேதி அன்ன வாகனம், 27-ந் தேதி காமதேனு வாகனம், 28-ந் தேதி வெள்ளை யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.
மார்ச் 1-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 2-ந் தேதி மதியம் 2.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ராஜவீதி தேர் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் கோவில் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை வந்தடையும்.
மார்ச் 3-ந் தேதி பரி வேட்டை, குதிரை வாகனத்தில் திருவீதி உலா, 4-ந் தேதி தெப்ப உற்சவம், 5-ந் தேதி தீர்த்தவாரி, அதன் பிறகு கொடியிறக்கம் நடைபெறுகிறது. மார்ச் 6-ந் தேதி வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. கொரோனா விதிகளை கடைபிடித்து தேர்த்திருவிழா நடத்தப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி மற்றும் தக்கார் விஜயலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஆழிமலை சிவன் கோவிலில் உள்ள சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் அமைந்திருக்கிறது, ஆழிமலை சிவன் கோவில். இந்தக் கோவிலின் பின்புறத்தில், கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான சிவபெருமான் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது கான்கிரீட் சிலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது. இந்தச் சிலையை வடிக்கும் பணியை, திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் படித்த பட்டதாரி மாணவரான பி.எஸ்.தேவதத்தன் என்பவர் செய்தார்.
இந்த சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய பாறையின் மீது அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை சம்மனம் போட்ட நிலையிலும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார். வலது கரத்தை தனது வலது தொடையில் வைத்தபடி இருக்கிறார்.
பொதுவாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பல சிவன் சிலைகளும், நேருக்கு நேராக தன்னை வழிபட வரும் பக்தர்களை நோக்கியபடியே இருக்கும். ஆனால் இந்த சிலை வாயிலாக அருளும் சிவபெருமான், தன்னுடைய தலையை இடதுபுறமாக திருப்பி, வானத்தை நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். மேலும் அவரது தலையில் இருக்கும் சடைமுடியானது, அவிழ்ந்த நிலையில் அதனுள் இருக்கும் கங்கைதேவி வெளிப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால் இந்த சிவபெருமானுக்கு ‘கங்காதேஸ்வரர்’ என்று பெயர்.
கடற்கரையில் இருந்து 20 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது, 58 அடி உயரத்தில் அமைந்த இந்த சிவன் சிலையை உருவாக்கத் தொடங்கியபோது, தேவதத்தனுக்கு 23 வயதுதான். தற்போது 30 வயதைக் கடந்திருக்கும் தேவதத்தன் இந்த சிலையைப் பற்றி சில விஷயங்களை சமூக வலைதளங்களிலும், சில பேட்டிகளிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் அவர், “இந்தப் பணி என்னிடம் வந்தபோது, என்னுடைய சிறு வயதின் காரணமாக பலருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய பணியின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது.
கடற்கரை ஓரத்தில் சிலையை உருவாக்கும்போது, கொந்தளிப்பான கடல், கடற்கரை காற்றின் தன்மை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு எனக்கு உதவியாக இருந்தவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். தற்போது சிலை முழுமையாக முடிந்து, அதனைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வரும்போது, நான் பட்ட கஷ்டங்கள், அனைத்தும் மகிழ்ச்சியாக முன் வந்து நிற்கிறது” என்கிறார்.
இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.
காலத்தைக் குறிப்பிடும் வடிவான தேவி இவள். ‘சர்வாத்மிகா’ என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். உதய நேரத்தில் இருக்கும் சூரியனின் நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தைக் கொண்டவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜெபமாலை, புஷ்பபாணம், கரும்பு - வில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபய -வரத முத்திரை தாங்கியிருப்பவள்.
கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி
மந்திரம்:-
ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்
கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன. சவுந்தர்ய ரூபவதியான இவள், அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழ்பவள். இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் விலகும். தோஷங்கள் அகலும். சகல சவுபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்தடையும்.
வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை தசமி, தேய்பிறை சஷ்டி
மந்திரம்:-
ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்
திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் ரத சப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதனை ‘சிறிய பிரம்மோற்சவம்’ என்பார்கள்.
ரத சப்தமி அன்று, திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதனை ‘சிறிய பிரம்மோற்சவம்’ என்பார்கள்.
இந்த ரதசப்தமியின் ஒரே நாளில், ஸ்ரீதேவி- பூதேவி உடனாய மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வருவார். அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் வலம்வருவார்.
பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார்.
இந்த ரதசப்தமியின் ஒரே நாளில், ஸ்ரீதேவி- பூதேவி உடனாய மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வருவார். அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் வலம்வருவார்.
பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார்.
இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும்.
பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரமும் உண்டு. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்வதுதான் சரியான முறையும் கூட. இனி பெருமாள் கோவில்களுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளுங்கள்.
ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய விஷ்ணு
பக்தி பிரியாய அமிர்த
கலச ஹஸ்தாய பஹு
பராக்ரமாய பக்ஷி ராஜாய
சர்வ வக்கிர சர்வ
தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா
ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய விஷ்ணு
பக்தி பிரியாய அமிர்த
கலச ஹஸ்தாய பஹு
பராக்ரமாய பக்ஷி ராஜாய
சர்வ வக்கிர சர்வ
தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா






