search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித செபஸ்தியார்"

    • திரளானவர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தினர்.
    • இன்று திருப்பலி, அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து வாண வேடிக்கை, புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தினர்.

    10-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும், கொடியிறக்கமும் நடைபெற்றது. விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு வடக்கூர் புனித அந்தோணியார் கெபியில் ஜெபமாலை, திருப்பலி மற்றும் அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா அருள் செபஸ்தியான், பொருளாளர் மகான் அந்தோணி, செயலாளர் லியோ ஜெப நீலன், பங்கு தந்தை டென்ஸில் ராஜா, நிர்வாக பொறுப்பு தந்தை அருள்மணி, அருட்சகோதரிகள், முத்துலாபுரம் தூய செபஸ்தியார் திருத்தல நிர்வாகக்குழு இறை மக்கள் செய்து இருந்தனர்.

    • பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.
    • ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறைமாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.

    முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ், மாடத்தட்டுவிளை பங்குதந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வின், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணைச் செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் லூக்காஸ் உள்பட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல்நாளான நாளை காலை 6 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி மறைந்த அருட்பணியாளர்கள் மற்றும் பங்கிற்கு நிலம் தானமாக வழங்கியவர்களுக்கான நினைவு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித செபஸ்தியாரின் ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்ேதானிபாப்புசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    விழாவில் 15-ந்தேதி காலை 6 மணிக்கு முளகுமூடு நாஞ்சில்பால் பதனிடும் நிலயை இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின் தலைமையில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், 19-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி, 20-ந்தேதி காலை 6 மணிக்கு புனித செபஸ்தியார் மறைசாட்சியாக உயிர்துறந்த தினத்தையொட்டி அருட்பணியாளர் மரிய ஆன்டணி தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    அதைதொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருப்பண்டம்(எலும்புத்துண்டு) பக்தர்ளுக்கு முத்தமிடும் நிழ்ச்சி, பக்தர்கள் வணக்கத்திற்காக ஆலயத்தில் வைத்தல், 10 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டம், 11 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு ஆயர் இல்ல மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசுரெத்தினம் அடிகளார் தலைமையில் திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    21-ந்தேதி காலை 6 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி தாளாளர் ஜேசுமரியான் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 22-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் தீஸ்மாஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். பங்குதந்தை ஜோஸ்பிரசாத் மறையுரையாற்றுகிறார். காலை 8.30 மணிக்கு திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு கண்தானம் செய்தவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெயகுமார், இணை பங்குதந்தை ெசல்வகுமார் மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பங்கு அருட்பணிபேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் நடைபெற்றது.
    • விடிய, விடிய விருந்து நடந்தது.

    திண்டுக்கல் முத்தழகுபட்டியில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான அந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு புனிதர்களின் மின்தேர்பவனி நடைபெற்றது.

    நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலியும், அதைத்தொடர்ந்து புனிதருக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி ஏராளமான மக்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள், கோழிகள், அரிசி, காய்கறி ஊர்வலமாக கொண்டு வந்து காணிக்கை செலுத்தினர். காலை முதல் மாலை வரை மக்கள் சாரை, சாரையாக வந்து காணிக்கை செலுத்தியபடி இருந்தனர்.

    அந்த வகையில் 1,500 ஆடுகள், 2 ஆயிரம் கோழிகள், 3 டன் அரிசி, 2 டன் தக்காளி, கத்தரிக்காய் 2 டன், 16 மூடை இஞ்சி, 400 கிலோ பூண்டு, 2½ டன் வெங்காயம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தப்பட்டன. அதை கொண்டு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சேர்ந்து அசைவ உணவு தயாரித்தனர்.

    இதையடுத்து மாலை 6 மணிக்கு புனிதரின் மன்றாட்டு ஜெபம் வேண்டுதல் நடைபெற்றது. அதன்பின்னர் அசைவ விருந்து தொடங்கியது. விடிய, விடிய நடந்த இந்த விருந்தில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி உள்ளிட்ட வெளியூர்களை சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றனர்.

    பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அண்ணா தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர் அண்ணா தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாலை 6-30 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது

    கொடியை சேவியர் கல்லூரி முதல்வர் வின்சென்ட் பிரிட்டோ, பங்குதந்தை ஜேம்ஸ் ஆகியோர் ஏற்றினர். இதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    3-ந்தேதி மதியம் 12 மணிக்கு அசன விருந்தும், மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 6-30 மணிக்கு சப்பரபவனியும் நடக்கிறது. 4-ந்தேதி மாலை 6 மணிக்கு கல்வெட்டான்குழி பங்குதந்தை அந்தோணிகுரூஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
    பாபநாசம் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும்.
    நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் புகழ் பெற்ற தஞ்சாவூர் - கும்பகோணத்திற்கும் நடுவில் உள்ள தாலுகா நகரம் தான் பாபநாசம். இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார்.

    புனித செபஸ்தியார் வரலாறு

    புனித செபஸ்தியார் கிபி 285ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள நர்ப்போன் என்னும் நகரில் பிறந்தார்.

    அக்காலத்தில் ரோமில் கிறிஸ்வர்கள் துன்பப்படுவதைக் கண்ட செபஸ்தியார் உதவிகரம் நீட்டினார். இன்றும் ரோமாபுரியில் உள்ள புனித செபஸ்தியார் கல்லறையில் ஆயிரைக்கனக்கான மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

    திருத்தல வரலாறு

    இத்திருத்தலம் மேற்குப் பார்த்து அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் முதல் பங்கு தந்தையாக 1933ம் ஆண்டு. ஜே.சி.காப்பன் சுவாமிகள் பொறுப்பேற்றார்.

    நூற்றாண்டு விழா:

    1990ம் ஆண்டு திருத்தலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1992ல் கோவில் முழுவதும் புதுப்பிக்கும் பணி நடைப்பெற்று கோயிலுக்கு பின்புறம்
    உள்ள அடர்ந்த காடுகளை அகற்றி புனித செபஸ்தியார் மணிமண்டபமும், புனித செபஸ்தியார் கலையரங்கமும் கட்டினர். கோயிலின் உள்ளே வடபுறத்திலும், தென்புறத்திலும் படுக்கை நிலையில் உள்ள செபஸ்தியாருக்கும், நின்று கொண்டிருக்கும் செபஸ்தியாருக்கும் தனித்தனியாக பீடங்கள் அமைத்தார். மர வேலைபாடுகளுடன் தேர் போல் அமைத்து புனிதரின் சுரூபத்தை (சிலை) நிறுவியுள்ளார். மேலும் கேரளாவிலிருந்த கொண்டு வரப்பட்ட முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பழமை வாய்ந்த ஆளுயுர சுரூபத்தை ஆலய வளாகத்தி்ல் வைத்து சிறப்பித்துள்ளார்.

    திருவிழாவின்சிறப்பு :


    ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
    நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் செபஸ்தியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் ஜெபமாலை, திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, புதுநன்மை, திருப்பலி, நற்கருணை பவனி ஆகியவை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஆராதனை நடைபெற்றது. கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றினார். நள்ளிரவு புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நேற்று காலை திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, மறையுரை ஆற்றினார். விழாவில் வாணவேடிக்கை, அசனவிருந்து, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்குதந்தைகள் நார்பர்ட் தாமஸ், ரெமிஜியுஸ் லியோன், விக்டர், சேகரன், விக்டர் சாலமோன், டென்சில் ராஜா, அந்தோணி ராஜ், சகாயராஜ், அல்போன்ஸ் வின்சென்ட், ரூபன், குழந்தை ராஜன், லாரன்ஸ், லடிஸ்லாஸ், பிரகாஷ், ஹெர்மன்ஸ், ராஜா, ஞானராஜ், மரிய அரசு, பென்சிகர், அமலன், பீட்டர் பாஸ்டியான், அமலதாஸ், சகாய ஜஸ்டின், அன்புச்செல்வன், கலைச்செல்வன், சந்தீஸ்ட்டன், பிரைட், ராபின்ஸ்டான்லி, செல்வரத்தினம், ஒய்.டி.ராஜன், பன்னீர்செல்வம், ரெக்ஸ், பீட்டர் பால், ஜாண்சன் ராஜ், சலேட் ஜெரால்டு, ஜஸ்டின், மைக்கிள் ஜெகதீஷ், வசந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குதந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள்ஜெபஸ்தியான் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான நாங்குநேரி அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நாளை நடக்கிறது.
    தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயமும் ஒன்றாகும்.

    இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் ஜெபமாலை, குணமளிக்கும் வழிபாடு, திருப்பலி நடைபெற்று வந்தது.

    8-ந் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புதுநன்மை திருப்பலியும், மாலையில் நற்கருணை பவனியும் நடக்கிறது. பிரதான திருவிழா மாலை ஆராதனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நள்ளிரவில் தேர் பவனி நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் திருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வள்ளியூர், திசையன்விளை, நாங்குநேரி ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை மணி அந்தோணி, தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள் செபஸ்தியான் மற்றும் இறை மக்கள் செய்துள்ளனர்.
    வள்ளியூர் அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய திருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலமும் ஒன்றாகும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சைவத் திருத்தலம் என அழைக்கப்படும் இத்திருத்தலத் திருவிழா இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. புனித செபஸ்தியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறை மாவட்ட பி‌ஷப் இவான் அம்புரோஸ் ஜெபம் செய்து கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    5-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் அமலிவனம் அமலதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறுகிறது. வள்ளியூர் அன்புச்செல்வன் மறையுரை வழங்குகிறார்.

    6-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு கோட்டாறு மறைமாவட்ட மேதகு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கலர் வாணவேடிக்கையும், கேரள புகழ் ஜெண்டா மேளமும், இரவு 12 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். 7- தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு அழகப்பபுரம் நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெறும் ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் சொக்கன் குடியிருப்பு மைக்கேல் ஜெகதீஷ் மறையுரையாற்றுகிறார்.

    பின்னர் மாலை ஆராதனையும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா டோனால்சன், கணக்கர் அருள் ஜெபஸ்தியான், பங்கு தந்தை மணி அந்தோணி மற்றும் முத்துலாபுரம் இறை மக்கள் செய்துவருகின்றனர்.
    கயத்தாறு அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளாக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன் கோட்டை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, நற்கருணை, சிறப்பு ஆராதனை நடந்து வந்தது.

    9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் ஆலய பங்குதந்தை வில்சன் தலைமை தாங்கி, ஆலய தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பின்னர் இரவு 10.30 மணிக்கு தேர் ஆலயம் வந்தடைந்தது.

    10-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. அப்போது பக்தர்கள் செபஸ்தியார் சொரூபத்துக்கு மாலை அணிவித்தனர். சிலர் நேர்ச்சையாக உப்பு, மிளகு கொடுத்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நடந் தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
    செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும்.
    அஞ்ஞானிகளால் உபாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் ஆறுதல் செய்யவும் வேதசாட்சி முடிபெறவும் போர்ச்சேவகரான புனித செபஸ்தியாரே, என்பேரில் இரக்கமாயிரும். ஆகாதவனுடைய மரணத்தை விரும்பாமல், அவன் குணப்பட விரும்பும் சர்வேசுரன்; பாவிகள் மனந்திரும்பவும், நீதிமான்கள் பரிசுத்தப்படவும், வைசூரி, பேதி  பெருவாரியான காய்ச்சல் முதலிய வியாதிகளை அனுப்பினாலும், சிலவிசை முன் பாடுபட்டுப் பேறடைந்த புனிதர்களுடைய வேண்டுதலாலே உபத்திரப் படுகிறவர்களுடைய துன்பநாளில் அவர்களுக்கு ஆறுதலை கட்டளையிடுகிறாரென்று நான் அறிந்திருக்கிறபடியால் இந்த வியாதியில் உமது சகாயத்தைக் கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பேரால் பீடம் எழுப்பியபின் வி:க்காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.

    தியோக்கிளேசியான் அரசனுக்குப் பயப்படாமல் பெரிய வேதசாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த உபத்திரவமான வியாதியில் என்னைக் கைவிடாதேயும். ஏன் பாவங்களுக்காக வந்த நோயை நான் பொறுமையோடே பொறுக்க வேண்டியதுதான், சுவாமியின் கைப்பாரம் என்மேல் சுமத்தப்பட்டது நானோ வெகுபலவீனன், காற்றால் அடிக்கப்பட்ட சருகுபோலிருக்கிறேன். கடலில் கிடக்கும் துரும்புபோல் தத்தளிக்கிறேன். தேவனுடைய கோபத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் குடிக்க வேணுமென்று சர்வேசுரன் மனதாயிருக்கிற இந்த துன்பப்பாத்திரத்தை நான் வீரம் பொருந்திய பொறுமையோடு குடிக்க எனக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ளும். என் கேட்டுக்காக அல்ல, என் நலத்திற்காகவே சர்வேசுரன் என்னைத் தண்டிக்கிறார். காயப்படுத்துகிறவரும், குணமாக்குகிறவரும் அவரேதான். நல்ல நாளில் சர்வேசுரனை நேசிக்கிறது போல துன்ப நாளிலும் அவரைச் சிநேகிக்கக் கடவேன். நான் இந்த வியாதியில் அலையுண்டு கலங்காதபடிக்கு, இந்த கசப்பான பாத்திரத்தை சந்தோசமாய் , அவர் திருக்கரத்திலிருந்து வாங்கிக் குடிக்க எனக்கு வேண்டிய தைரியத்தை பெற்றுத் தந்தருளும்.

    ஒரு தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மனுமக்களை மறவாத சர்வேசுரன் வைசூரி, பேதி, காய்ச்சல் முதலிய வியாதிகளையும், தந்திரம், போர், பஞ்சம் முதலிய பெரிய துன்பங்களையும் பட்சத்தினால் வரவிடுகிறார் என்று நாங்கள் அறிந்திருந்தும் ஏன் அவர் பேரில் முறைப்படுவேன்? ஆகையால் புனித செபஸ்தியாரே! இந்த வியாதி சீக்கிரம் குணமாகச் சர்வேசுரன் சித்தமாயிராவிட்டால், நான் அதை நல்ல மனதோடு பொறுக்க எனக்குத் தைரியத்தையாகிலும் தர மன்றாடும். என் பாவங்களின் பரிகாரத்துக்காக இன்னும் அதிக நோய்களும், துன்பங்களும் வரவேண்டுமென்று நான் ஆசிக்க வேண்டியதுதான். ஆர்ச்சிய:;டவர்களே துன்பதுரித நோய்களை ஆசித்திருக்கப் பாவியாகிய நான் நித்தய பாக்கியமடைய நோய் வருத்தங்களை ஆசிக்காமலிருக்கக் கூடுமோ? ஆனால் புனித செபஸ்தியாரே நான் மகா பலவீனனும், புண்ணியத்தில் திடனற்றவனுமாயிருப்பதால் தேவரீர் என்மேல் இரங்கி இந்தத் துன்பங்களைப் பொறுமையோடாகிலும் நான் சகித்துக் கொள்ள எனக்காக ஆண்டவரை மன்றாடும். – ஆமென்.
    மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..
    மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் பங்கு நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி காண்போம்.

    புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கன்னியாகுமரி வில்லுக்குறி அருகில் உள்ள மாடத்தட்டுவிளை ஊரில் தங்கியதாகவும், இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் என்றும் மாடத்தட்டுவிளை ஆலயத்தில் உள்ள விளக்குத்தூண் அதன் தொன்மைக்கு சான்றாக கூறப்படுகிறது.

    இந்த கல் விளக்குத்தூண் 15-2-1371-ல் கோவில் வகைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கல்த்தூண் இப்போதைய ஆலயத்தின் வடமேற்கு ஓரத்தில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. ஆகவே, இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.

    கி.பி.1,603-ல் இயேசு சபை குருக்களால் போர்ச்சுக்கீசியர் ஆதரவில் களிமண்ணால் ஆன முதல் ஆலயம் நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டாறுக்கு அடுத்தபடியாக மாடத்தட்டுவிளையில் அமைக்கப்பட்டது. அன்று முதல் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கு தளத்தின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்பட தொடங்கியது. கி.பி. 1,644-ல் உரோமை இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் கோட்டாறு பங்குதளத்தில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளி விவரம் அனுப்பியுள்ளார்.

    அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்ற செய்தியை தருகிறார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்பட தொடங்கியதும் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து கி.பி.1853 மார்ச்-15 ம் நாள் முதல் காரங்காடு பங்கின் கிளை பங்கானது.

    பின்னர் கி.பி. 1918 நவம்பர் 10-ம் நாள் காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவ சிலை ரோமாபுரியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்திலிருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடும் ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது,

    இதன் சிறப்புக்குரியதாகும். கி.பி. 1923-ம் ஆண்டு ஜனவரி 2-ம் நாள் புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எலும்பு துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் அருளிக்கமாக மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி பக்தர்களின் வணக்கத்திற்கு வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் தேதிபடி திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், இவ்வாலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திரு பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.
    ×