search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்திருவிழா"

    • பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சிக்குட்பட்ட அடவி சாமிபுரம் கிராமத்தில் மதனகிரி முனீஸ்வர சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர்.

    இதில் விழா கமிட்டி தலைவர் சமபங்கிராம ரெட்டி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் நீலம்மா ஜெயராமன், மல்லசந்திரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேகா முனிராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர ஆர்த்தி, தொழில் அதிபர் சுரேஷ் பாபு, வசந்தகுமார், துரைசாமி, டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, ஊராட்சி மன்ற செயலாளர் விஸ்வநாத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விழா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று இரவு நாடகம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • நேற்று இரவு பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
    • தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அன்னசாகரம் ஸ்ரீ விநாயகர் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திரவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    9-ம் நாளான நேற்று மாலை விநாயகர் ரதம் புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு சிவகிரி செங்குந்தர் சமூகத்தினர் பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுரசித்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விழா நடைபெற்றது. சிவ சுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார். தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது அவர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி, அன்னசாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளாமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சென்றனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குத்த மரபினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • தேன்கனிக்கோட்டை அருகே கவுரம்மாதேவி தேர் திருவிழா நடைபெற்றது.
    • இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு.

    தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே கும்மளாபுரம் கிராமத்தில் கவுரம்மா கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கும்மளாபுரம் கிராமத்தில் வீரபத்திரசாமி கோவில் அருகில் உள்ள கவுரம்மா தேவி கோவில் தேர்திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.

    ஆண்டு ஆண்டு காலமாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் மற்றும் கவுரம்மாதேவி தேர் திருவிழாயைட்டி கடந்த வினாயகர் சதுர்த்தி நாளில் கோவில் திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. தேர்திரு விழாவையொட்டி நவராத்திரி முதல் நாளில் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவில் விநாயகர் மற்றும் கவுரம்மா தேவிக்கு தனிதனியாக தேர் அமைந்து 120 பேர் தேரை சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊரில் முழுவதும் ஊர்வலம் வந்தனர். பிறகு அருகில் கவுரம்மா ஏரியில் முதலில் விநாயகரையும் பிறகு கவுரம்மா சிலைகளை தண்ணீரில் கரைத்தனர். இந்த ஊரில் தவிர வேறு எங்கும் கவுரம்மா கோவில் இல்லை முன்னதாக இங்கு விசேஷ பூஜைகளும் 101 கிணற்றில் தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேசம் செய்தனர்.

    இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு. இந்த கிராமத்தில் 101 ஏரிகள், 101 குளங்கள் 101 கோயில்கள், 101 வில்வமரம், உள்ள இடம் என்று புராணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த கவுரம்மா தேவின் உருவத்தை களிமண்ணால் சிறப்பு அலங்காரம் செய்து தங்கத்தாலி அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் தேவியின் களிமண் சிலையை மூழ்கடித்து 3 நாள் கழித்து அம்மன் தேவி சிலை கழுத்தில் இருந்த தங்கத்தாலி ஏரியில் மேலே மிதக்கும் இந்த தாலியை எடுத்து அம்மன் சன்னிதானத்தில் வைத்து கோவிலை பூட்டிவிடுவது வழக்கமாகும்.

    இத்திருவிழாவில் மடாதிபதிகள், சுற்றுபுற பல கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கர்நாடக ஆந்திர மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மீண்டும் கோவில் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.

    அதன்படி ஆகஸ்ட் 29-ந் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது. அன்னையின் பிறந்தநாள் விழா நாளை (8-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.

    கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இங்கு அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.

    இன்று புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் அப்போது அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியபடியே அன்னை செல்வது சிறப்பு. மக்கள் வெள்ளத்தில் தேர் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    • 20 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
    • ஆடியபடி செல்லும் தேர் எங்காவது ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் சாய்ந்து விடும்.

    திருவாரூர்

    திருவாரூர் ஒன்றியம் தப்பளாம்புலியூர் கிராமத்தில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சக்கரம் இல்லாத இந்தத் தேரை 2 வாரைகள் என பெரிய பல்லக்கு கம்புகள் மீது கட்டி பக்தர்கள் தோளிலும், தலையிலும் தூக்கி கொண்டு இடமும், வலமுமாக ஆடியபடி வீதி வீதியாக செல்வதுடன், ஆடியபடி செல்லும் தேர் எங்காவது ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் பக்கவாட்டில் சாய்ந்து விடும்.

    அப்போது தேரில் உள்ள அம்மனும், பூசாரியும் சாய்ந்து விழுவதும், பின்னர் பூசாரி எழுந்து அம்மனை நேராக வைத்தவுடன் மீண்டும் பக்தர்கள் தூக்கி செல்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.

    இப்படி சாய்ந்து, மீண்டும் எழுந்து செல்வதால் இவ்வூர் அம்மன், விழுந்து எழுந்தாளம்மன் என்ற அழைக்கப்பட்ட நிலையில் நாளடைவில் மறுவி குளுந்தாளம்மன் என அழைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தேர் யார் வீட்டின் முன்பு சாய்கிறதோ அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்பதும், யாருடைய வயலில் சாய்கிறதோ அந்த வயலில் விளைச்சல் பெருகும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கையாகும். நிலையை அடைந்தது கடந்த 20-ந் தேதி தொடங்கி தேர்திருவிழாவில் 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது.

    வாரைகளின் மீது 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட தேரை பக்தர்கள் தங்களின் தோள்களில் தூக்கிச் செல்லப்பட்ட தேர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நேற்று நிலையை அடைந்தது. தேரை சாய்த்து வணங்கும் விநோத திருவிழாவை தப்பளாம்புலியூர், காரியாங்குடி, பல்லாவரம், வாஞ்சூர், இலங்கைசேரி உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் சிறப்புமிக்க விழாவாகும்.

    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
    • இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் ஸ்ரீ குழந்தை வடிவேல் முருகன் ஆலயத்தின் 53-ம் ஆண்டு ஆடி கிருத்திகை தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 4-ம் தேதி ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றுதல் மற்றும் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதலுடன் இடும்பன் சாமிக்கு முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனை தொடர்ந்து 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சாமிக்கு கங்கை பூஜையுடன் காவடிகள் அலங்கரித்தல் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

    அதனையடுத்து பிற்பகல் 2 மணியளவில் விரதம் இருந்த பக்தர்கள் முருக பெருமானின் கோவிலில் பூசாரியின் மூலம் அலகு குத்துதல், முதுகில் தேர் இழுத்தல், உடல் முழுவதும் எழுமிச்சை பழம் கோர்த்தல், பால் காவடி எடுத்தல், பன்னீர் காவடி எடுத்தல், புஷ்ப காவடி எடுத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்டவைககளுடன் சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் இருந்து ஊர்வ லமாக சென்று கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

    இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

    இத்தேர் திருவிழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த 7-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பாஸ்கர், ஊர் கவுண்டர்கள் முத்து, ராஜா, பழனி, கண்ணன், செந்தில் மந்திரி கவுண்டர், ராஜா உள்ளிட்டோர் செய்திரு ந்தனர்.

    இதனை தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
    • இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில், தாசில்தார் கலைச்செல்வி அறிவுரையின்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழாவை நடத்த அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

    மேலும் கோவில் திருவிழா, இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும். இந்து சமய அறநிலைய துறையினர் தவிர தனிப்பட்ட நபர்கள் யாரும் நன்கொடைகள் வசூலிக்க கூடாது.

    சாமி ஊர்வலத்தின் போது எந்த தரப்பினரும் தனது சமூகத்தை முன்னிலை படுத்தி ஆடைகள் மற்றும் தொப்பிகள் அணியக்கூடாது. வெட்டும் குதிரை ஊர்வலம் வரும் 23-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டும் நடைபெற வேண்டும். தேரோட்டம் வரும் 25-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற வேண்டும்.

    கோவில் பெயருடன் வெள்ளை நிற பனியன் அணிந்த பொத்தனூரைச் சேர்ந்த 60 பேர் மட்டும் தேருக்கு சன்னக்கட்டை போட வேண்டும். திருவிழா நடைபெறும் போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் வருவாய்த்துறையினர் போலீசார் மற்றும் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டனர்.

    • தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.
    • முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.

    இன்று இரவு இரவு 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபானம் நிகழ்ச்சி, முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு சம்பூர்ன இராமயானம் நாடகம், மறுநாள் (5ம் தேதி) காலை 8 மணிக்கு. எருது விடும் விழா, இரவு பாட்டுகச்சேரி பல்லக்கு ஊர்வலம் மற்றும் வானவேடிக்கை நடை பெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது.
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அம்ருதா மல்லிகார்ஜுன சாமி கோவில் உள்ளது.

    ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 600 ஆண்டுகளுக்கு முன்பு சாமியின் திருமண் கொண்டு வரப்பட்டு இங்கு இந்த கோவிலானது, பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று மல்லிகார்ஜுன சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து, எஸ் .முதுகானப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேர் கிராமத்தின் வீதிகளில் சுற்றி வந்து பின்னர், கோயிலுக்கு அருகே நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவ ஜாம பூஜை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவில், திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    5-ந்தேதி சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்தநிலையில் சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    இந்நிலையில் வீரகாளியம்மன் கோவில் தேர் திருவீதியுலா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை 4 மணியளவில் வீரகாளியம்மன் தேர் பாதை, மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வரும் 5-ந்தேதி சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது.

    • கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து நெறிமுறைகளை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருதமலை, அருள்மிகு சுப்பிரமணி–யசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீப்(சட்டம் ஒழுங்கு), மதிவாணன் (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது:-

    கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 28-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

    பண்டிகை தினங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், தேவையான போக்குவரத்து நெறிமுறைகளை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

    போதிய அளவிலான காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.திருவிழா நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடித்திட வேண்டும்.

    மாநகராட்சியின் மூலம் திருவிழாவின் போது குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருக்கோவிலில் தேவையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தும், குப்பைகளை அகற்றி பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    தீயணைப்பு வாகனத்தினை நிறுத்திவைப்பதுடன், தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.

    திருவிழா நாட்களில் கோவில்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவதுடன், தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்புகளை சரிவர கண்காணித்திட வேண்டும். திருவிழா நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழல் நிலவுவதால், மருத்துவ உதவி வழங்கிட மருத்துவர் குழுவோடு 2 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், முதலுதவி மேற்கொள்ளும் பொருட்டு, தனியாக மருத்துவ குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்செல்லும் பாதைகளில் உள்ள மேடு, பள்ளங்கள் ஏதேனும் இருப்பின் சீர்படுத்தி சாலை செப்பனிடுதல் வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா

    ஏற்காடு:

    ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் தேர் திருவிழா நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நேற்று முன்தினம் வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது.

    நேற்று புனிதர்களின் தேர்கள் எடுக்கப்பட்டு புனித அந்தோணியாரின் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    திருவிழாவின் போது பஸ் நிலையம், மற்றும் டவுன் பகுதியில் புனிதர்களின் திரு உருவ மின் கோபுரங்கள், ஜண்டா மேளம், லாங்கில் பேட்டை ஊர் முழுவதும் மின்சார பல்புகள் அமைக்கப்பட்டு வானவேடிக்கை சிறப்பாக அமைந்ததது . விழாவில் ஆண், பெண் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×