search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Glunthalamman Temple"

    • 20 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.
    • ஆடியபடி செல்லும் தேர் எங்காவது ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் சாய்ந்து விடும்.

    திருவாரூர்

    திருவாரூர் ஒன்றியம் தப்பளாம்புலியூர் கிராமத்தில் குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சக்கரம் இல்லாத இந்தத் தேரை 2 வாரைகள் என பெரிய பல்லக்கு கம்புகள் மீது கட்டி பக்தர்கள் தோளிலும், தலையிலும் தூக்கி கொண்டு இடமும், வலமுமாக ஆடியபடி வீதி வீதியாக செல்வதுடன், ஆடியபடி செல்லும் தேர் எங்காவது ஒரு சில இடங்களில் பாரம் தாங்காமல் பக்கவாட்டில் சாய்ந்து விடும்.

    அப்போது தேரில் உள்ள அம்மனும், பூசாரியும் சாய்ந்து விழுவதும், பின்னர் பூசாரி எழுந்து அம்மனை நேராக வைத்தவுடன் மீண்டும் பக்தர்கள் தூக்கி செல்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.

    இப்படி சாய்ந்து, மீண்டும் எழுந்து செல்வதால் இவ்வூர் அம்மன், விழுந்து எழுந்தாளம்மன் என்ற அழைக்கப்பட்ட நிலையில் நாளடைவில் மறுவி குளுந்தாளம்மன் என அழைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு தேர் யார் வீட்டின் முன்பு சாய்கிறதோ அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்பதும், யாருடைய வயலில் சாய்கிறதோ அந்த வயலில் விளைச்சல் பெருகும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கையாகும். நிலையை அடைந்தது கடந்த 20-ந் தேதி தொடங்கி தேர்திருவிழாவில் 3 நாட்கள் தேரோட்டம் நடந்தது.

    வாரைகளின் மீது 20 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட தேரை பக்தர்கள் தங்களின் தோள்களில் தூக்கிச் செல்லப்பட்ட தேர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நேற்று நிலையை அடைந்தது. தேரை சாய்த்து வணங்கும் விநோத திருவிழாவை தப்பளாம்புலியூர், காரியாங்குடி, பல்லாவரம், வாஞ்சூர், இலங்கைசேரி உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் சிறப்புமிக்க விழாவாகும்.

    ×