search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 days"

    • 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.

    அதன்படி ஆகஸ்ட் 29-ந் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது. அன்னையின் பிறந்தநாள் விழா நாளை (8-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.

    கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இங்கு அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.

    இன்று புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் அப்போது அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியபடியே அன்னை செல்வது சிறப்பு. மக்கள் வெள்ளத்தில் தேர் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash
    சண்டிகர்:

    அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash

    அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், விவசாயிகளின் அவல நிலையை ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், ராஷ்ட்ரிய கிசான் மஹாசங் என்ற விவசாய அமைப்பானது கிசான் அவ்காஷ் (விடுமுறையில் விவசாயிகள்) என்ற பெயரில் புதிய போராட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக பேசிய அரியானா மாநிலத்தின் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் குர்னாம் சிங், அரியானாவில் உள்ள 6 ஆயிரத்து 800 கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இன்று முதல் ஜூன் 10-ம் தேதி வரை நகரங்களுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்ற எவ்வித பொருட்களையும் விற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

    மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் விவசாய சங்கங்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளன. மேலும், 10 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும், இறுதி நாளான ஜூன் 10-ம் தேதி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

    பஞ்சாபில் ஏற்கனவே கடைகளுக்கு கொடுத்த காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் திரும்பபெற்றுக்கொண்டனர். #kisanavkash 
    ×