என் மலர்
நீங்கள் தேடியது "வேளாங்கண்ணி மாதா"
- போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
- கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை.
வேளாங்கண்ணி மாதா பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திய சம்பவங்கள் உள்ளன. அவற்றில் 3 அதிசயங்கள் முக்கியமானவை. அவை பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா காட்சி அளித்தது. மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம், புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகியவை ஆகும்.
இவற்றில் மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்தது, புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகிய 2 அதிசயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம்
பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா அளித்த காட்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி அன்னையின் 2-வது காட்சி வேளாங்கண்ணி சிற்றூரிலேயே அமைந்துள்ள "நடுத்திட்டு" என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். ஒரு நாள் மீண்டும் எழில்மிகு தோற்றத்துடன் வேளாங்கண்ணி அன்னை தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து, தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டார்.
தாயின் பேரழகையும், குழந்தையின் தெய்வீக முகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன், குழந்தைக்கு மகிழ்வுடன் மோர் வழங்கினான்.
அப்போது அந்த பேரழகு பெட்டக தாய், அந்த சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார். "மகனே உடனே நாகப்பட்டினம் சென்று அங்கே வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக" என்றார். ஆனால் அந்த சிறுவனோ தான் நடக்க முடியாதவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி அன்னையை பார்க்கிறான்.

அவனின் ஏக்கத்தை புரிந்து கொண்ட வேளாங்கண்ணி அன்னை "மகனே எழுந்து நட" என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார். அந்த சிறுவனின் கால்களிலே ஒரு புது ரத்தம் பாய்வது போல் தோன்றியது. அந்த சிறுவனும் உடனே எழுந்தான், நடந்தான், ஓடினான். அந்த சிறுவனின் ஓட்டம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது. வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னான்.
அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்தார் அந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர். அதற்கு முந்தைய இரவில் அந்த கத்தோலிக்க கிறிஸ்தவரின் கனவில் தூய அன்னை தோன்றி ஆலயம் கட்ட சொன்னதை நினைவு கூர்ந்தார். உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி அன்னை காட்சி கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது. மகனே இந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக. இதை கேட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டி முடித்தார். அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி அன்னை வீற்றிருக்கும் பேராலயம்.
புயலில் சிக்கிய கப்பலை பத்திரமாக கரை சேர்த்தாள் அன்னை
கி.பி. 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி அன்னையின் 3-வது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்காவில் இருந்து போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
வழியில் கடுமையான புயலில் அந்த கப்பல் சிக்கியது. அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் பயந்து, நடுங்கினார்கள். புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.
நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில், கன்னி மரியே உமக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என வேண்டினர். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோஷம் குறைய தொடங்கியது.
அவர்கள் கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது. அன்றைய தேதி செப்டம்பர் 8. அது கன்னி மரியாவின் பிறந்த நாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை. மாலுமிகள் தாங்கள் நலமுடன் கரை வந்து சேர்ந்ததற்காக கன்னி மரியாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக அன்னைக்கு சிறிய ஆலயம் ஒன்று எழுப்பினார்கள்.
போர்த்துக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ, அப்போதெல்லாம் அங்கு வந்து அன்னையை வணங்கி செல்வது வழக்கம். அப்படி வரும் போது ஒருமுறை தாம் கட்டிய ஆலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி அன்னை ஆலயப்பீடத்தில் பதித்து, ஆலயத்தை அழகுபடுத்தினார்கள்.
அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்ைக நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.
அவை வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தை அலங்கரிக்கும் அழியா ஓவியங்களாக, இறவா காவியங்களாக வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தில் இன்றும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலயத்தின் வடிவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
அன்னை ஆரோக்கிய மாதா நிகழ்த்தி காட்டிய அதிசயங்களால் வேளாங்கண்ணி ஆலயம் உலகம் போற்றும் பேராலயமாக விளங்குகிறது.
- கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள்.
- வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அருகே உள்ள வங்காள விரிகுடா கடல், பக்தர்களால் ஒரு புனித இடமாக கருதப்படுகிறது.
பாவங்கள் போகும்
இந்த கடல் பகுதியில் நீராடுவதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய் வாழ்வில் நல்வழி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் இந்த கடலின் நீர் புனிதமானதாக கருதப்படுவதால் பலர் அதை அருந்தி, தங்கள் நோய்கள் நீங்கி குணமடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், கடலோரத்தில் அமைந்துள்ளதால், கடலும் புனிதத்தன்மையுடன் கருதப்படுகிறது.
புதிய அனுபவம்
இந்த கடலில் பக்தர்கள் நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நம்புகிறார்கள். அதனை கண்கூடாகவே கண்டதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். கடலின் அருகே அமர்ந்து, அன்னை ஆரோக்கிய மாதாவை மனதார பிரார்த்தனை செய்து வழிபடுவது ஒரு புதிய அனுபவமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது, கடலில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. கடலின் அமைதியான சூழல், பக்தர்களுக்கு ஒரு நிம்மதியான அனுபவத்தை தருகிறது.
- இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது.
- உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.
வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி தேவாலயம் அமைந்துள்ளது.
இந்தியாவின் புனிதமான கிறிஸ்தவ புனிதத்தலங்களில் முதன்மையானதாக இத்தலம் கருதப்படுகிறது. சென்னையில் இருந்து 350 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டினத்தில் இருந்து 12 கி.மீ. தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
17-ம் நூற்றாண்டின்...
17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை இயேசுவுடன் கன்னி மேரி இங்கு தோன்றினார் என்றும், அதன் பிறகு வேளாங்கண்ணி கிறிஸ்தவ சமூகத்தின் போற்றப்படும் இடமாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இது போப் ஆண்டவரால் புனித நகரமாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள்.
அதிசய சக்திகள்
இங்குள்ள புனித ஆரோக்கிய மாதா அன்னைக்கு அதிசய சக்திகள் இருப்பதாக தேவாலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களால் நம்பப்படுகிறது. ஜாதி, மதம், இனம் கடந்து அனைவரும் இத்தலத்திற்கு வந்து அன்னையை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
பிரச்சினைகள் தீரும்
கல்வி, செல்வம், திருமணம், வேலை வாய்ப்பு, குழந்தையின்மை, தீராத மன கஷ்டம் மற்றும் நோய்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு வந்து அன்னையை மனமுருகி வேண்டிக்கொண்டால் அவர் அருள்பாலித்து தீர்த்து வைக்கிறார் என்பது காலம் கடந்த நம்பிக்கை ஆகும். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அன்னையை தரிசித்துவிட்டு வீடு திரும்புங்கள். உங்கள் கவலை அனைத்தும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிறையும்.
- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
- திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
ஜனவரி 1-ந்தேதி மரியா இறைவனின் அன்னை விழா மற்றும் திருக்காட்சி திருவிழாவில் பங்கில் உள்ள சிறுவர்,சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்குதல்.
பிப்ரவரி 2- ஆண்டவரை காணிக்கையாக ஒப்பு கொடுத்தல் விழா. முதல் திருப்பலி முடிந்ததும் மெழுகுவர்த்திகள் மந்திரிக்கப்படும்.
பிப்ரவரி 11- லூர்து அன்னை விழா, மாலை மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திருப்பவனி.
மார்ச் 25- கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா.
மே மாதம் - மாதாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம். காலை 5.45 மணிக்கு தமிழில் திருப்பலி, மாதா சொரூப ஆசீர்.
காலை 7 மணிக்கு தமிழில் பாடல் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு மரியாவின் வணக்க மாதம். படித்தல் நவநாள் ஜெபம். அன்னையின் திருத்தேர் பவனி, திருப்பலி.
மே 30- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
மே 31- காலை 7 மணிக்கு பாடல் திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை செய்யப்பட்டு பகல் முழுவதும் ஆராதனை நடைபெறும்.
மாலை 6 மணிக்கு மாதா குளத்தில் திருப்பலி, மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திவ்ய நற்கருணை பவனி, திரு உரை திவ்ய நற்கருணை ஆசீர்.
ஜூன் மாதம்- இயேசு திரு இருதயத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட மாதம். அன்றைய மாதம் தினமும் மாலை 5.45 மணிக்கு நவநாள் ஜெபம், ஜெப மாலை, இயேசுவின் திரு இருதய ஜெபம், திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி.
ஜூன் 30- இயேசுவின் இருதய திருத்தேர் பவனி.
ஜூலை 6- மாலை கார்மேல் அன்னை கொடியேற்றம்.
ஜூலை 15- மாலை கார்மேல் அன்னை திருத்தேர் பவனி.
ஜூலை 16- கார்மேல் அன்னை திருவிழா.
ஆகஸ்டு 15- மரியாவின் விண்ணேற்பு பெருவிழா.
ஆகஸ்டு 29- ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், தொடர்ந்து 30-ந் தேதி முதல் செப்டம்பர் 6 -ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
செப்டம்பர் 7- பெரிய தேர்பவனி
செப்டம்பர் 8- அன்னை மரியாள் பிறந்தநாள்.
செப்டம்பர் 15- புனித வியாகுல மாதா திருவிழா.
அக்டோபர் 7- புனித ஜெபமாலை அன்னை திருவிழா.
நவம்பர் 21- புனித கன்னி மரியாவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.
டிசம்பர் 8- புனித கன்னி மரியாவின் அமர் மேற்பவ பெருவிழா.
டிசம்பர் 24- நள்ளிரவு 11.45 தமிழில் பாடல் திருப்பலி.
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் பெருவிழா.
டிசம்பர் 28- மாசிலா குழந்தைகள் விழா
மேற்கண்ட திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.
வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக திகழ்கிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ பேராலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற பெருமை மிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி மாதா பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும்.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்படும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மின்விளக்கு அலங்காரம் செய்ய பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
- கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேராலயம் சாா்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
வேளாங்கண்ணி சுற்றுலா வந்த பயணிகள் மின்விளக்கு அலங்காரத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும்.
- திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது.
இது கீழை நாடுகளின் "லூர்து " நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய " பசிலிக்கா" என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.
தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். இந்த தவக்காலத்தின் போது புலால் உண்ணாமலும், அடுத்தவர்களிடம் அன்பாகவும் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நல்ல பண்புகளை வளர்த்துக்கொண்டு நல்ல ஒழுக்கத்தை கடைபிடிக்க இந்த தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் போது கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பங்கு தந்தையர்கள் பூசி ஆசிர்வாதம் செய்தனர்.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர் டேவிட் தன்ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- பிப்ரவரி 22-ந் தேதி தவக்காலம் தொடங்கியது.
- தவக்காலம் 4-வது வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் "லூர்து" நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.
கடந்த மாதம்(பிப்ரவரி) 22-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். இந்த தவக்காலத்தில் இறைச்சி உண்ணாமலும், அடுத்தவர்களிடம் அன்பாகவும் இருப்பார்கள்.
தவக்காலம் 4-வது வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நேற்று முன்தினம் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. அப்போது ஏசு, சிலுவையில் அறையும்போது 14 நிலையில் பட்டபாடுகளை பாதிரியார்கள் எடுத்து கூறினர்.
ஊர்வலம் பேராலய மேல் கோவிலில் இருந்து புறப்பட்டு மாதா குளம் அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவிபங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், அருள் சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
- மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.
இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.
அப்போது மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.
இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கிறிஸ்தவர்களின் தவக்காலம் பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கியது.
- நேற்று பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.
கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமான புனித வெள்ளி நாள் ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனியுடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ் சீடர்களுக்கு புனித நீரால் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.
இன்று புனித வெள்ளியை முன்னிட்டு பேராலயத்தில் மாலை 5.30 மணிக்கு இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, சிலுவை பாதை மற்றும் ஏசுவின் திருவுருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
- இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயம் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் பசிலிக்கா என்னும் சிறப்பு அந்தஸ்தையும் பெற்று விளங்குகிறது.
இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு. இந்த பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மே மாதம் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.
இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு அருகே உள்ள தேரில் உள்ள மாதாவின் சொரூபத்திற்கு தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் கிரீடத்தை வைத்து முடி சூட்டினார்.
பின்னர் தேரை புனிதம்செய்து பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட் சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.
- இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது.
- தேர்பவனி 15-ந்தேதி நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயமானது வங்கக் கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி பவனி நடந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து புறப்பட்ட பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக ஆலயத்தை அடைந்தது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றிவைக்கபட்டது.
இதில் பங்குதந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ், அருள் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் திரளானோர் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.






