என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேளாங்கண்ணி பேராலயத்தில் மின்விளக்கு அலங்காரம், முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் மின்விளக்கு அலங்காரம், முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
    • கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.

    இங்கு ஆண்டுதோறும் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேராலயம் சாா்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    வேளாங்கண்ணி சுற்றுலா வந்த பயணிகள் மின்விளக்கு அலங்காரத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    Next Story
    ×