என் மலர்
நீங்கள் தேடியது "Velankanni Mata"
- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
- திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
ஜனவரி 1-ந்தேதி மரியா இறைவனின் அன்னை விழா மற்றும் திருக்காட்சி திருவிழாவில் பங்கில் உள்ள சிறுவர்,சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்குதல்.
பிப்ரவரி 2- ஆண்டவரை காணிக்கையாக ஒப்பு கொடுத்தல் விழா. முதல் திருப்பலி முடிந்ததும் மெழுகுவர்த்திகள் மந்திரிக்கப்படும்.
பிப்ரவரி 11- லூர்து அன்னை விழா, மாலை மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திருப்பவனி.
மார்ச் 25- கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா.
மே மாதம் - மாதாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம். காலை 5.45 மணிக்கு தமிழில் திருப்பலி, மாதா சொரூப ஆசீர்.
காலை 7 மணிக்கு தமிழில் பாடல் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு மரியாவின் வணக்க மாதம். படித்தல் நவநாள் ஜெபம். அன்னையின் திருத்தேர் பவனி, திருப்பலி.
மே 30- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
மே 31- காலை 7 மணிக்கு பாடல் திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை செய்யப்பட்டு பகல் முழுவதும் ஆராதனை நடைபெறும்.
மாலை 6 மணிக்கு மாதா குளத்தில் திருப்பலி, மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திவ்ய நற்கருணை பவனி, திரு உரை திவ்ய நற்கருணை ஆசீர்.
ஜூன் மாதம்- இயேசு திரு இருதயத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட மாதம். அன்றைய மாதம் தினமும் மாலை 5.45 மணிக்கு நவநாள் ஜெபம், ஜெப மாலை, இயேசுவின் திரு இருதய ஜெபம், திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி.
ஜூன் 30- இயேசுவின் இருதய திருத்தேர் பவனி.
ஜூலை 6- மாலை கார்மேல் அன்னை கொடியேற்றம்.
ஜூலை 15- மாலை கார்மேல் அன்னை திருத்தேர் பவனி.
ஜூலை 16- கார்மேல் அன்னை திருவிழா.
ஆகஸ்டு 15- மரியாவின் விண்ணேற்பு பெருவிழா.
ஆகஸ்டு 29- ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், தொடர்ந்து 30-ந் தேதி முதல் செப்டம்பர் 6 -ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
செப்டம்பர் 7- பெரிய தேர்பவனி
செப்டம்பர் 8- அன்னை மரியாள் பிறந்தநாள்.
செப்டம்பர் 15- புனித வியாகுல மாதா திருவிழா.
அக்டோபர் 7- புனித ஜெபமாலை அன்னை திருவிழா.
நவம்பர் 21- புனித கன்னி மரியாவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.
டிசம்பர் 8- புனித கன்னி மரியாவின் அமர் மேற்பவ பெருவிழா.
டிசம்பர் 24- நள்ளிரவு 11.45 தமிழில் பாடல் திருப்பலி.
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் பெருவிழா.
டிசம்பர் 28- மாசிலா குழந்தைகள் விழா
மேற்கண்ட திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
- விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது.
மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
அதன்படி ஆகஸ்ட் 29-ந் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது. அன்னையின் பிறந்தநாள் விழா நாளை (8-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இங்கு அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.
இன்று புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் அப்போது அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியபடியே அன்னை செல்வது சிறப்பு. மக்கள் வெள்ளத்தில் தேர் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- வேளாங்கண்ணி மாதா ரத பவனி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது .
- விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மறை மாநில அருட்தந்தை பன்னீர்செல்வம் சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.
அலங்கரிக்கப்பட்ட மின்னொளி ரதத்தில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஏற்றப்பட்டு பங்கு மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது. லாரன்ஸ் போஸ் ஆசீர்வாதத்துடன் சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று சப்பரபவனி தொடங்கியது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரத பவனியில் அருட்சகோதரிகள் வழிபாடு பாடல்களை பாடி வந்தனர். 43-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் நெற்குப்பை, சிங்கம்புணரி, மாதா நகர், காரையூர் இலங்கை முகாம் மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.






