என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் லீவ் எடுக்கும் போராட்டம் - காய்கறி, பழங்கள் விற்க மாட்டோம் என அறிவிப்பு
Byமாலை மலர்1 Jun 2018 6:16 AM GMT (Updated: 1 Jun 2018 6:33 AM GMT)
அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash
சண்டிகர்:
அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash
அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், விவசாயிகளின் அவல நிலையை ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய கிசான் மஹாசங் என்ற விவசாய அமைப்பானது கிசான் அவ்காஷ் (விடுமுறையில் விவசாயிகள்) என்ற பெயரில் புதிய போராட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பேசிய அரியானா மாநிலத்தின் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் குர்னாம் சிங், அரியானாவில் உள்ள 6 ஆயிரத்து 800 கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இன்று முதல் ஜூன் 10-ம் தேதி வரை நகரங்களுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்ற எவ்வித பொருட்களையும் விற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு விளை பொருட்களை விற்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். #kisanavkash
அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், விவசாயிகளின் அவல நிலையை ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய கிசான் மஹாசங் என்ற விவசாய அமைப்பானது கிசான் அவ்காஷ் (விடுமுறையில் விவசாயிகள்) என்ற பெயரில் புதிய போராட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பேசிய அரியானா மாநிலத்தின் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் குர்னாம் சிங், அரியானாவில் உள்ள 6 ஆயிரத்து 800 கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இன்று முதல் ஜூன் 10-ம் தேதி வரை நகரங்களுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பால் போன்ற எவ்வித பொருட்களையும் விற்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் விவசாய சங்கங்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளன. மேலும், 10 நாட்களும் அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும், இறுதி நாளான ஜூன் 10-ம் தேதி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ஏற்கனவே கடைகளுக்கு கொடுத்த காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் திரும்பபெற்றுக்கொண்டனர். #kisanavkash
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X