புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா

ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா
தேர் பவனி வந்த காட்சி.
தேர் பவனி வந்த காட்சி.
Published on

ஏற்காடு:

ஏற்காடு லாங்கில் பேட்டை புனித அந்தோணியார் தேர் திருவிழா நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் நேற்று முன்தினம் வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது.

நேற்று புனிதர்களின் தேர்கள் எடுக்கப்பட்டு புனித அந்தோணியாரின் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவிழாவின் போது பஸ் நிலையம், மற்றும் டவுன் பகுதியில் புனிதர்களின் திரு உருவ மின் கோபுரங்கள், ஜண்டா மேளம், லாங்கில் பேட்டை ஊர் முழுவதும் மின்சார பல்புகள் அமைக்கப்பட்டு வானவேடிக்கை சிறப்பாக அமைந்ததது . விழாவில் ஆண், பெண் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com