search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை முருகன், கோனியம்மன் கோவில் தேர்திருவிழா-காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்
    X

    மருதமலை முருகன், கோனியம்மன் கோவில் தேர்திருவிழா-காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்

    • கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து நெறிமுறைகளை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருதமலை, அருள்மிகு சுப்பிரமணி–யசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீப்(சட்டம் ஒழுங்கு), மதிவாணன் (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது:-

    கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 28-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

    பண்டிகை தினங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், தேவையான போக்குவரத்து நெறிமுறைகளை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

    போதிய அளவிலான காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.திருவிழா நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடித்திட வேண்டும்.

    மாநகராட்சியின் மூலம் திருவிழாவின் போது குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருக்கோவிலில் தேவையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தும், குப்பைகளை அகற்றி பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    தீயணைப்பு வாகனத்தினை நிறுத்திவைப்பதுடன், தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.

    திருவிழா நாட்களில் கோவில்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவதுடன், தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்புகளை சரிவர கண்காணித்திட வேண்டும். திருவிழா நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழல் நிலவுவதால், மருத்துவ உதவி வழங்கிட மருத்துவர் குழுவோடு 2 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், முதலுதவி மேற்கொள்ளும் பொருட்டு, தனியாக மருத்துவ குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்செல்லும் பாதைகளில் உள்ள மேடு, பள்ளங்கள் ஏதேனும் இருப்பின் சீர்படுத்தி சாலை செப்பனிடுதல் வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×