search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கனவு நிறைவேறியது: டோனிக்கு பந்து வீசியது குறித்து சந்தீப் சர்மா நெகிழ்ச்சி
    X

    கனவு நிறைவேறியது: டோனிக்கு பந்து வீசியது குறித்து சந்தீப் சர்மா நெகிழ்ச்சி

    • இப்போட்டியில் சந்தீப் சர்மா 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    • 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    சென்னை:

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது இதனைத் தொடந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் டோனி - ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்றது.

    கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா டோனிக்கு யாக்கர் வீசி வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.


    இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் சந்தீப் சர்மா. இந்த நிலையில் தன் கனவு நிறைவேறியதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    சந்தீப் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    உங்களுடைய 200 வது ஐபிஎல் போட்டிக்கு வாழ்த்துகள் டோனி பாஜி...உங்களுடன் இந்தக் களத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். எப்போது நன்றியுடன் இருப்பேன். என் கனவு நிறைவேறியது.

    என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×