அன்னம் வழங்கிய அன்னபூரணி படக்குழு- நெகிழ்ச்சியில் மக்கள்

மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலர் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அன்னம் வழங்கிய அன்னபூரணி படக்குழு- நெகிழ்ச்சியில் மக்கள்
Published on

'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அன்னபூரணி படக்குழு

இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அன்னபூரணி படக்குழு

இந்நிலையில், அன்னபூரணி படக்குழு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி' என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com