search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
    X

    2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்

    2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய அக்‌ஷய் குமார் விஷால் கேள்விக்கு பதில் அளித்த போது, உடற்பயிற்சி குறித்த அறிவுரை வழங்கினார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

    இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமார் தமிழில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழில் பேச 2 முதல் 3 மணிநேரம் வரை பயிற்சி எடுத்தன். பேச பயமாக இருக்கிறது. பேசுகிறேன், தவறாக இருந்தால் மன்னியுங்கள்.

     

    வணக்கம் சென்னை. மகிழ்ச்சி. இந்த பாலிவுட் நடிகர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசை மகான் ஏ.ஆர்.ரமானுடன் 2.0 படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நானும் இந்த படத்தில் இருப்பது பெருமை. மகிழ்ச்சி உங்க அனைவருக்கும் நன்றி. என்றார்.

    பின்னர் அக்‌ஷய் குமாரிடம் வீடியோ மூலமாக விஷால் கேள்வி எழுப்பினார். அதில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன என்று கேட்டார். விஷாலுக்கு பதில் அளித்த அக்‌ஷய்குமார், நான் எனது சிறிய வயது முதல் உடற்பயிற்சி செய்து வருகிறேன். மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதுவே காரணம் என்று கூறிய அக்‌ஷய், விஷால் பற்றிய ஒரு பேட்டி பார்த்தேன். அதில் விஷாலின் அம்மா, விஷால் அரிசி சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டிருந்தார். 

    எனவே அம்மாவுக்காக ஒரே ஒரு நாள் அரிசி சம்பந்தப்பட்ட உணவை எடுத்துக் கொள்ளுங்கள் விஷால் என்று அக்ஷய் கூறினார். #2Point0Trailer #2Point0TrailerDay #Rajinikanth

    Next Story
    ×