என் மலர்
- இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார்.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 46 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 54 ரன்னும், அபிஷேக் சர்மா 52 ரன்னும் எடுத்தனர். கடைசியில் அதிரடி காட்டிய ஷிவம் துபே 26 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை பாராட்டி எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவில் கம்பீரை தோனி கலாய்த்ததால் அந்த பதிவு இணையத்தில் வைரலானது.
அந்த பதிவில், அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவரின் அந்த தீவிரம் கலந்த புன்னகை ஒரு 'கில்லர் காம்போ'. பும்ரா ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்" என்று தோனி தெரிவித்துள்ளார்.
- இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய அணிக்கு திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா எக்ஸ் தள பக்கத்தில் "இந்தியா தி சாம்பியன்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், 'என்ன ஒரு அணி, என்ன ஒரு சிறப்பான ஆட்டம்... நாட்டிற்கு என்ன ஒரு பெருமையான தருணம். டி20 உலகக் கோப்பையை வென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்' என கூறியுள்ளார்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், 'நாம ஜெயிச்சிட்டோம், என்ன ஒரு போட்டி' என தெரிவித்துள்ளார்.
நடிகர் சதீஷ் எக்ஸ் தள பக்கத்தில், சக்திவாய்ந்த அணியின் சக்திவாய்ந்த வெற்றி பல சாதனைகளை முறியடித்துள்ளது. சஞ்சு, பும்ரா, இஷான், ஹார்டின், வருண், ஆக்சர் துபே, அபிஷேக் மற்றும் சூர்யாவை நேசிக்கிறேன்... என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம்பிரபு, 'டீம் இந்தியாவுக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் ஒவ்வொரு வீரரின் அற்புதமான பங்களிப்புகள்' என்று கூறியுள்ளார்.
- இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
- அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த 2023-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு தழுவிய அளவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனை விசாரித்த கோர்ட்டு, இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 47 முக்கியத் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அக்கட்சியின் ஆதரவாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஏற்கனவே இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் சிறையில் இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றிருந்தார். பெங்களூருவில் கட்டப்பட்டு இருந்த கிம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. இதனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்றது அந்த விழாவுக்கு வந்தவர்களை திணறடித்தது.
ஜூனியர் என்.டி.ஆர். மருத்துமனையை திறந்து வைக்கும் தகவல் அறிந்து அங்கு கூடிய ரசிகர்களால் பரபரப்பான சூழல் உருவானது. மிகக் குறுகிய இடத்தில் ஒரே நேரத்தில் ரசிகர்கள் திரண்டதால், மருத்துவமனைக்குள் தள்ளுமுள்ளு சூழல் உருவானது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை கட்டுப்பட்டுத்த முடியாமல் விழா ஏற்பட்டாளர்கள் திணறினர்.
இதையடுத்து காவல் துறையினர் கூட்டத்திற்குள் நுழைந்து ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ காண ஒன்று திரண்ட ரசிகர்களால் திறப்பு விழாவுக்காக தயாராகி இருந்த நகரும் படிக்கட்டுகள் உள்பட மருத்துவமனை உள்கட்டமைப்புகள் சேதமடைந்தது.
புதிய மருத்துவமனை திறப்பு விழாவின் போது திடீரென அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடியது, அங்கு கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது.
- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாளை (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பதாகவும் இதற்கு இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த நிலையில், ரெயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை எனவும் தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
- கொலை முயற்சி வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார்.
சிவங்கை மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
இவரை போலீசார் அடித்தேக் கொன்றதாகக்கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கஸ்டடி மரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
மானாமதுரையில் இருவரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் காவல் துறை விசாரணையின் போது ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் பேசு பொருளாகி இருக்கிறது.
- சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார்.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பினராயி விஜயன் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அணிக்கு ஒரு வரலாற்று வெற்றி. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் அற்புதமான வெற்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம்.
டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்ட சஞ்சுசாம்சனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். நீங்கள் கேரளாவையும் முழு இந்தியாவையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி" என்று தெரிவித்துள்ளார்.
- இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.
- இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும்.
சியோல்:
தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரூ.29 லட்சம் கோடி (350 பில்லியன் டாலர்) தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தென் கொரிய நாடாளுமன்றம் தாமதம் செய்து வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் கார்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால் தென் கொரியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால், அந்நாட்டு அரசு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து பேசிய தென் கொரிய தொழில் துறை மந்திரி கிம் ஜங்-குவான், "அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான சிறப்புச் சட்டத்தை வரும் 12-ந் தேதி தென் கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம். இந்த தகவல் அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி உயர்வு அபாயம் நீங்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் இதில் பிடிவாதமாக இருந்தது. தற்போது தென் கொரியா இதற்குச் சம்மதித்துள்ளதால் இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
- சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி பிரபல மலையாள நடிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
- சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
- யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன்.
'இதுதாண்டா போலீஸ்' படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த டாக்டர் ராஜசேகர் -ஜீவிதாவின் இளைய மகள் ஷிவாத்மிகாவும் நடிகை ஆவார். தமிழில் 'பாம்', 'ஆரோமலே' படங்களில் நடித்துள்ள சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷிவாத்மிகாவிடம், 'என்ன மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கும் போது, "யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன். எனக்கு ஆக்ஷன் கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனது தந்தையை போல ஆக்ஷனில் கலக்க விரும்புகிறேன். அதேவேளை காதல் நிரம்பி வழியும் படங்களிலும் நடிக்க துடிக்கிறேன். நல்ல கதைகள் அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.
- மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம்.
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-25 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நள்ளிரவு 11.58 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : விசாகம் மாலை 4.44 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவான்மியூர், பெசன்ட்நகர், திருமயிலை, திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று தேய்பிறை சஷ்டி விரதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-லாபம்
மிதுனம்-பரிசு
கடகம்-இன்பம்
சிம்மம்-உறுதி
கன்னி-பாராட்டு
துலாம்- பரிவு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- உண்மை
மகரம்-வெற்றி
கும்பம்-புகழ்
மீனம்-பணிவு
- இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
- ஐசிசி தொடர்களில் அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணி நியூசிலாந்து.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 255 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது. அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவுவது இது 6-வது முறையாகும்.
இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே (2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 முறை தோல்வியைச் சந்தித்துள்ளது.
2009 சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2015 ஒருநாள் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2019 ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் பவுண்டரி கணக்கு அடிப்படையில் தோல்வி.
2021 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2026 டி20 உலகக்கோப்பை: நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
இருப்பினும், ஐசிசி தொடர்களில் அதிகமுறை (14 முறை) அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து இப்போதும் தக்கவைத்துள்ளது.







