செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி

வியன்னாவில் தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி?

Published On 2020-11-02 22:11 GMT   |   Update On 2020-11-03 07:53 GMT
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.
வியன்னா: 

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்குள்ள மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும்மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மந்திரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது  என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News