search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shooting"

    • பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார்
    • நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது.இந்நிலையில்

    நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் நேற்று பகிர்ந்தார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்". தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்" என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு இருந்தார்.




    இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் - நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும் படங்கள், இரட்டை குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார். 

    நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக வீட்டை விட்டு பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார். நயன்தாரா இணையத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    'சிங்கப்பூரில் இருந்து 20 நாடுகளுக்குப் பிறகு திரும்பிய உங்களை ( விக்னேஷ்) பார்த்தபோது நாங்கள் மூவரும் எப்படி உணர்ந்தோம் என்பதை விளக்க முடியவில்லை. நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது.
    • இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் .


    பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    இந்நிலையில், 'சித்தா' புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட புது படத்தில் நடிகர் விரக்ம் நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சியான் 62' படத்தை இதற்கு முன் 'மும்பைகார்' மற்றும் 'தக்ஸ்' படங்களை தயாரித்த ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் சியான் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க தொடங்குகிறார்.




     

    இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்துக்குஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'சியான் 62' படப்பிடிப்பு குறித்த 'அப்டேட்' பகிர்ந்து உள்ளார்.

     அதில் 'சியான் 62' படப்பிடிப்பு தொடர்பாக இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது. இதற்காக நாங்கள் முழு உழைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் 'என கூறி உள்ளார்


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.
    • கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா'திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

    இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்','கிச்சா வயசு 16'படங்களை இயக்கி உள்ளார்.

    இந்நிலையில், கவுண்டமணியை ஹீரோவாக வைத்து 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தை சசி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. யோகிபாபு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரரும் நடித்துள்ளனர். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நிலை மற்றும் தேர்தல், ஓட்டு தொடர்பான காமெடிகளை மையமாக வைத்து படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு நடக்கும் சம்பவம் அரிதானது.
    • இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர் ஒருவர் மூன்று பேரை சுட்டுக்கொலை செய்தார்.

    ஈரானில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி மூலம் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதில் அவனுடைய தந்தை உள்ளிட்ட 12 உறவினர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் உள்ள மத்திய மாகாணம் கெர்மன். இங்குள்ள பர்யாப் கவுன்ட்டியில் உள்ள புறநகரின் கிராமம் ஒன்றில் குடும்ப பிரச்சனை காரணமாக, நடந்த சண்டையின் உச்சக்கட்டமாக இந்த துபாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உறவினர்கள் மற்றும் தந்தை ஆகியோரை வெறித்தனமாக சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் பாதுகாப்புப்படையினர் அந்த நபரை சுற்றி வளைத்து துப்பாக்கியல் சுட்டு கொலை செய்துள்ளனர்.

    ஈரானில் மிகப்பெரிய அளவிலான துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்வது மிகவும் அரிதானது. அங்கே வேட்டையாடுவதற்கு மட்டும் மக்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படுகிறது.

    இரண்டு வருடத்திற்கு முன்னதாக அரசு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மூன்று முறை கொலை செய்தார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

    • காயம் அடைந்த ஒருவர் கெஞ்சியபோதும் அந்த நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கிச் சூடு பற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.

    புதுடெல்லி:

    டெல்லி தென்மேற்கு பகுதியில் நஜப்கர் என்ற இடத்தில் உள்ள சலூனில் நேற்று சில வாலிபர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக அந்த சலூனுக்குள் நுழைந்தது. அங்கிருந்தவர்கள் அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடினார்கள்.

    இதையடுத்து அந்த கும்பல் 2 வாலிபர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டது. முதலில் ஒரு வாலிபர் சலூனுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவர் மீது 4 குண்டுகள் பாய்ந்து இருந்தது.

    மற்றொரு வாலிபரை மிக அருகில் சென்று கும்பலைச் சேர்ந்த ஒருவர் மிரட்டினார். தன்னை சுட்டு விடவேண்டாம் என்று அந்த வாலிபர் கெஞ்சினார். என்றாலும் அந்த வாலிபர் தலை மீது கும்பலைச் சேர்ந்தவர் சுட்டார்.

    அடுத்தடுத்து அந்த வாலிபர் மீது 4 தடவை துப்பாக்கிச் சூடு நடந்தது. குண்டு பாய்ந்த 2 வாலிபர்களும் சலூனுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். அந்தச் சமயத்தில் அங்கு வந்த சலூன் பணிப்பெண் இந்த காட்சிகளை கண்டு அலறியடித்து ஓடினார்.

    சுட்டுக்கொல்லப்பட்ட 2 வாலிபர்களும் சோனு, ஆஷிஷ் என தெரிய வந்துள்ளது. தலா 26 வயதான அவர்கள் இருவர் மீதும் டெல்லி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    ரவுடிகளான அவர்களை மற்றொரு ரவுடி கும்பல் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. முன் விரோதம் காரணமாகவே 2 வாலிபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    சலூனுக்குள் 2 வாலிபர்களும் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இன்று காலை அந்த கேமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    • நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது. இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர். இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.


    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர். தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.


    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் 875 பேர் துப்பாக்கிச்சூடு வன்முறையால் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இல்லினாய்ஸ் மாநிலத்தில் சிகாகோ அருகில் உள்ள ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ஏழு பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 23 வயதான அவருடைய பெயர் ரோமியோ நான்ஸ். சிகப்பு கலர் டொயோட்டா காம்ரி காரில் தப்பியோடிவிட்டார். ஆயுதங்களுடன் உள்ள அவர் ஆபத்தானவர் எனவும் எச்சரித்திருந்தார்.

    நான்ஸ் மற்றும் அவரது கார் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்குமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்ஸ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் முதல் மூன்று வாரங்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக 875 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது.
    • ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசைய மைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி றது.

    இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்த புரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

    2 நாட்கள் தொடர்ந்து அங்கேயே ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம், தெப்பக்குளம் பகுதியில் படம் பிடிக்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரஜினிகாந்த் சிறிது நேரம் புத்தகம் படித்தும் தியானமும் செய்தார்.

    படப்பிடிப்பு முடிந்ததும் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி ஆரவாரம் செய்தனர்.

    • பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
    • துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்.

    செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    துப்பாக்கி சூடு நடைபெற்றதை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். திடீர் துப்பாக்கி சூட்டில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

     


    பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் வேறு யாரும் துப்பாக்கியுடன் இல்லை என்பதை உள்துறை மந்திரி உறுதுப்படுத்தி இருக்கிறார். 

    • கடந்த 2017-ல் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.
    • துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தின் அருகில்தான் பிரபல சூதாட்ட மையம் உள்ளது.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் உள்ளது.

    சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், "நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூன்று முறை துப்பாக்கியால் சுடும் பெரிய சத்தத்தை கேட்டேன். அதன்பின் இரண்டு முறை சத்தம் கேட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் போலீசார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் நான் அடித்தளத்திற்கு ஓடினேன். நாங்கள் அங்கு 20 நிமிடங்களில் பதுங்கி இருந்தோம்" என்றார்.

    லாஸ் வேகாஸில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூட நடைபெற்றது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
    • தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சாம்பவ் ஜெயின். தொழில் அதிபரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கும்பலால் கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாம்பவ் ஜெயினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் கும்பலை நெருங்கினர். இந்நிலையில் கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய தேடப்படும் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என் கவுண்டரின் போது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

    இதுகுறித்து லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், லூதியானாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சாம்பவ் ஜெயின் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபம் என்கிற கோபி மற்றும் சஞ்சீவ் குமார் என்ற சஞ்சு பஹ்மான் ஆகியோர் போலீஸ் தரப்புடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

    இன்ஸ்பெக்டர் குல்வந்த் சிங் தலைமையிலான போலீஸ் குழு அவர்களை துரத்திக் கொண்டிருந்தபோது, லூதியானா மாவட்டத்தில் உள்ள டோராஹா நகரில் உள்ள திப்பா பாலம் அருகே என்கவுண்டர் நடந்தது. இதில் ஏ.எஸ்.ஐ. சுக்தீப் சிங் என்ற போலீஸ்காரரும் பலத்த காயமடைந்தார். இறந்த இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளி என்ற ஜதின், பிரேம்ஜித், மந்தோஷ், ஆதித்யா மற்றும் மன்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

    ×