செய்திகள்
ஆப்கானிஸ்தான் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதலில் 11 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் 11 தலிபான்கள் பலியாகினர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஷோராபக் மாவட்டத்தில் அமெரிக்க கூட்டுப் படையினர் நேற்று திடீரென நடத்திய வான்வழி தாக்குதலில் 11 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.