செய்திகள்
இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு வரலாற்றில் இடம் பெறும் -பூடான் பிரதமர் புகழாரம்
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பும், தைரியமும் வரலாற்றில் இடம் பெறும் என பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், பாராட்டி பேசியுள்ளார்.
திம்பு:
இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் ஆறுதல் கூறும் வகையில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரையாற்றும்போது அங்கிருந்த பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி உரையாற்றிவிட்டு சென்றபோது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதார். இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் சிவனை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, கடின உழைப்பு குறித்து பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் கூறிய வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் இன்று பெருமை படுகிறோம். சந்திரயான் 2 கடைசி நிமிடத்தில் சில கடுமையான சவால்களைக் கண்டது.
ஆனால், இதற்கான உங்கள் கடின உழைப்பும், தைரியமும் வரலாற்றில் இடம் பெறும். பிரதமர் மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவரும், அவரது இஸ்ரோ குழுவும் நிச்சயம் ஒருநாள் அதை சாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என கூறியுள்ளார்.