செய்திகள்
‘பொறுமையை கடைபிடியுங்கள்’ - இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுரை
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினரும் பொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தி உள்ளது.
நியூயார்க்:
ஐ.நா. பொதுச்செயலாளர், காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கவலையுடன் பார்த்து வருகிறார். அனைத்து தரப்பினரும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால்தான் அவர் சமரசம் செய்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸின் நிலைப்பாடு பற்றி அவருடைய செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
ஐ.நா. பொதுச்செயலாளர், காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கவலையுடன் பார்த்து வருகிறார். அனைத்து தரப்பினரும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இரு நாடுகளும் கேட்டுக்கொண்டால்தான் அவர் சமரசம் செய்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.