செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு அறிவிப்பு

Published On 2019-04-22 12:48 GMT   |   Update On 2019-04-22 12:48 GMT
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது. #SriLankablast #blastvictimscompensation
கொழும்பு:

இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 400-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்ட இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒரு லட்சம் ரூபாய் இந்தியாவின் 40 ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankablast #blastvictimscompensation
Tags:    

Similar News