செய்திகள்

வங்காளதேசத்தில் இரட்டை கருப்பைகள் மூலம் இரு மாதங்களில் அடுத்தடுத்து குழந்தைகள் பெற்ற பெண்

Published On 2019-03-27 12:55 GMT   |   Update On 2019-03-27 12:55 GMT
வங்காளதேசம் நாட்டை சேர்ந்த ஒரு பெண் இரட்டை கருப்பைகள் மூலம் அடுத்தடுத்து இரு மாதங்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். #BangladeshWoman #TwoWombs
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதி. இங்குள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் அமைந்துள்ளது தெரிய வந்தது. 

இதற்கிடையே, பிப்ரவரி மாதம் 25-ம் தேதி அரிபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22-ல் அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நான் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்தார். #BangladeshWoman #TwoWombs

Tags:    

Similar News