செய்திகள்

காபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் -10 பேர் பரிதாப பலி

Published On 2018-11-29 10:00 GMT   |   Update On 2018-11-29 10:00 GMT
ஆப்கான் தலைநகர் காபுலில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Kabulsuicideattack #Kabulattack
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அருகில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அங்கிருந்த 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரிட்டன் பாதுக்காப்பு நிறுவனம் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிறுவனம், காபுலிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. #Kabulsuicideattack #Kabulattack
Tags:    

Similar News