செய்திகள்

செர்பியா அதிபருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

Published On 2018-09-15 10:08 GMT   |   Update On 2018-09-15 10:17 GMT
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செர்பியா அதிபரை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu
பெல்கிரேட் :

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்றடைந்த அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், உணவு உற்பத்தி, விவசாயம், மருந்துகள், பதுகாப்புத்துறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். பின்னர், வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்தார். #VenkaiahNaidu
Tags:    

Similar News