செய்திகள்

சிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி

Published On 2018-08-17 14:03 GMT   |   Update On 2018-08-17 14:03 GMT
உள்நாட்டு போரால் சீர்குலைந்த சிரியாவை மறுகட்டமைப்பு செய்யவும், அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. #Syria #SaudiArabia
ஜெட்டா:

வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதுதவிர, வடகிழக்கு பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஐ.எஸ்.க்கு எதிரான சண்டையில் அவர்கள் வசமிருந்த அனைத்து பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான படை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான படையின் வசம் இருக்கும் ரக்கா நகரை சுற்றியுள்ள பல பகுதிகளை மறு கட்டமைப்பு செய்யவும், விவசாயம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி செய்யப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சிரிய அதிபர் ஆசாத்தை கடுமையாக எதிர்க்கும் சவுதி, அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News