செய்திகள்

பிரிட்டனில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய வீரர்கள்

Published On 2018-08-15 14:54 GMT   |   Update On 2018-08-15 14:54 GMT
பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியினர் சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியுள்ளனர். #IndependenceDayIndia #TeamIndia #ENGvIND
லண்டன்:

இந்திய அணி தற்போது பிரிட்டனில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு வெளியே தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர். இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்து அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News