என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Team India"
- இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்
- விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது
ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.
மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வாழ்க்கையின் தற்போதைய கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியில் கோலி (361) மற்றும் டூ பிளசிஸ்க்கு (232) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (226) 3-ம் இடத்தில் உள்ளார்.
இந்த சீசனில் சிறந்த பினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ஆனால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காயத்திலிருந்து மெதுனு பார்முக்கு திரும்பிய பண்ட், சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல். ராகுல் ஆகியோர் அந்த போட்டியில் உள்ளனர்.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கார் ஆகியோர் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை மதித்து நடப்பேன். ஆனால் நான் 100% தயாராக உள்ளேன் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் அடுத்தடுத்தாண்டுகளில் நடைபெறுகின்றன.
- இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என ரோகித் தெரிவித்துள்ளார்.
மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனல் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி மோதியது. இரண்டிலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
வருகிற ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்த அணியையும் இவர்தான் வழி நடத்துகிறார்.
இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 36 வயதான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது, குறிப்பாக ஒயிட்பால் (டி20) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன் என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில்தான் ரோகித் சர்மா இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன் உடன் கவுரவ் கபூர் நடத்தும் "பிரேக்பாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது எட் ஷீரன் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.
எட் ஷீரன் ஓய்வு எப்போது எனக் கேட்ட கேள்விக்கு,
ரோகித் சர்மா: "இந்த நேரத்திலும் நான் நன்றாக விளையாடி வருகிறேன். ஆகவே, இன்னும் சில வருடங்கள் விளையாடும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.
எட் ஷீரன்: இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வரைக்கும்?
ரோகித் சர்மா: "ஆமாம். இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். 2025-ல் இங்கிலாந்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்திய அணி அதற்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்விகள் உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது." என்றார்.
- ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். இவரது படிப்பு முடிந்த உடன் குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று, அங்கேயே குடியேற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது தயார் கனடா செல்ல விருமபாததால் இந்தியாவிலேயே தங்கியதாகவும், அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கனடா சென்று, அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பினீர்களா? என்று அவரது மனைவி சஞ்சனா கேட்டதற்கு பும்ரா அளித்த பதில் வருமாறு:-
ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். படிப்பை முடித்ததும் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய மாமா இருக்கின்றார்.
அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை என எனது தயார் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. மாறாக கனடா அணிக்காக விளையாட முயற்சி செய்திருப்பேனா? அல்லது ஏதாவது செயதிருப்பேனா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அது வேலை செய்ததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்" என்று கூறினார்.
- ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
- விராட் கோலி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.
டி20 உலகக்கோபை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி மே மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு உலகக் கோப்பை வருவதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இந்திய அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு இருக்காது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட் அணியில் இணைவதற்கு தயாராகி வருகிறார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் டாப் 3 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங்கிற்கு இடம் உறுதி என்பதில் சந்தேகம் இருக்காது.
அதிவேகமாக பந்து வீசும் மயங்க் யாதவ் தேர்வாளர்கள் மனதில் இடம் பெறலாம். வேகப்பந்து வீச்சுக்கான இடத்தை பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பிடிக்கலாம்.
- காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார்.
- விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பினார். கால்முட்டியில் ஆபரேஷன் செய்து கொண்ட அவர் 17-வது ஐ.பி.எல். தொடர் மூலம் மறுபிரவேசம் செய்வதற்காக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது உடல்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கும் செய்கிறார். விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார். ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் விளையாடினால் பெரிய பலமாக இருக்கும். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து.
சிக்கலின்றி விக்கெட் கீப்பிங் பணியை அவர் தொடரும் பட்சத்தில், அவரால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட முடியும். அதற்கு முன்னோட்டமாக ஐ.பி.எல். போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இது ஒரு நிறுவனம் அல்ல. எனவே இதில் யாரும் முதலீடு செய்ய முடியாது.
இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.
- முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன் குவிப்பு, இங்கிலாந்து 319 ரன்னில் ஆல்அவுட்.
- நேற்றைய ஆட்டத்தின்போது அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்திய வீரர்கள் ஏன் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் கடந்த 13-ந்தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமானார்.
அதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
நேற்று இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார். சாதனையை கொண்டாடுவதற்குள் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக இந்த டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
தலைசிறந்த வீரருக்கான இந்திய வீரர்கள் முதல்நாள் ஆட்டத்தின்போது இதை செய்திருக்க வேண்டும். இது மிகவும் காலதாமதம் என தனது அதிருப்தியை முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.
- கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
- 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 839 ரன்கள் அடித்துள்ளார்.
30 வயதான ஹனுமா விஹாரி இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
தற்போது ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க விரும்பினார். ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணிக்காக விளையாடி வரும் அவர் ஏழு இன்னிங்சில 365 ரன்கள் அடித்துள்ளார்.
தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் "நான் இந்திய அணியில் இல்லாததை கவலையாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறேன். அனைவருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும்.
தற்போது என்னுடைய பணி ரஞ்சி தொடரில் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான். எனக்கும் அணிக்கும் இந்த சீசன் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய லட்சியம் அதிக ரன்கள் குவித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான்" என்றார்.
ஹனுமா விஹாரி 2018-ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடினார். அதில் முறையே 22 மற்றும் 11 ரன்கள் அடித்தார்.
இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 839 ரன்கள் அடித்துள்ளார்.
- இன்றைய நாளில் சிறந்த லெக் ஸ்பின்னர் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
- தற்போது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது வேறு விசயம்.
டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இந்திய அணி சரியான அணியை தேர்வு செய்வதற்கான சோதனையில் இறங்கிவிட்டது.
சுழற்பந்து வீச்சாளர்களில் பிஷ்னோய், அக்சார் பட்டேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு சிறந்த நபரை தேர்வு செய்ய இருக்கிறது.
ஆனால் டி20-யில் சிறப்பாக பந்து வீசும் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் ஏன்ற புறக்கணிக்கப்படுகிறார் எனத் தெரியவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:-
சுழற்பந்து வீச்சு என்று வந்தாலே, நான் சாஹலைத்தான் முதலில் தேர்வு செய்வேன். அவர் புறக்கணிக்கப்படுகிறார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இன்றைய நாளில் கூட, சிறந்த லெக் ஸ்பின்னர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சாஹலை விட தைரியமான ஸ்பின்னர் உள்ளனர் என்று நான் நினைக்கவில்லை. மிகவும் கூர்மையான மனநிலை கொண்டனர்.
2-வதாக ஜடேஜாவை தேர்வு செய்வேன். ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டால் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யலாம். தற்போது தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள், நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது வேறு விசயம்."
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
- கே.எல். ராகுல் உடன் மூன்று விக்கெட் கீப்பர்.
- நான்கு சுழற்பந்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுல், கே.எஸ். பரத், த்ருவ் ஜுரேல் (அறிமுகம்) என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம பிடித்துள்ளனர்.
பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அஸ்வின், ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பிடித்துள்ளனர்.
சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. கே.எல். ராகுல், 7. கே.எஸ். பரத், 8. த்ருவ் ஜுரேல் (அறிமுகம்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. அக்சார் பட்டேல், 12. குல்தீப் யாதவ், 13. முகமது சிராஜ், 14. முகேஷ் குமார், 15. பும்ரா, 16. ஆவேஷ் கான்.
2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்ரவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி முதல் மார்ச் 11-ந்தேதி வரை தரம்சாலாவிலும் நடைபெறுகிறது.
- நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
- உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.
ஜோகன்னஸ்பர்க்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.
அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.
தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.
இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
- தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி கொல்கத்தாவில் நடைபெற்றது.
- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் மந்தமாக இருந்தது. ரன்கள் அடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் எல்லாம் ரன்கள் குவிக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்துவிட்டு, முக்கிய அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு இப்படி ஆடுகளம் தயார் செய்யலாமா? என விமர்சிக்கப்பட்டது.
அதேபோல் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆடுகளமும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் இந்தியா முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்லோ பிட்ச் என்பதால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இதனால் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இரவு நேரத்தில் லைட் ஒளியின் கீழ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறந்த அளவில் ஒத்துழைத்தது. 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன்பின் சிறப்பாக விளையாடினார்கள்.
முதல் 10 ஓவருக்குப்பின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து டர்ன் ஆகவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களால் ஜொலிக்க முடியவில்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்ட நிலையில், ஆடுகளம் எதிர்பார்த்த அளவில் சுழற்பந்து திரும்புவதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் 2-வது அரையிறுதி , இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் சாரசரி என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
- டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
- டி20 கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க பிசிசிஐ இருவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திகழந்து வருகிறார்கள்.
நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடினார்கள். தொடர் முழுவதும் அசத்திய இருவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரும் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கப்படும். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. விராட் கோலிக்கு 35 வயதாகிறது.
டி20 கிரிக்கெட்டில் இருவரின் ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை. என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறது.
அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2026-ல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழி நடத்தும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது.
தற்போது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா, விராட் கோலியுடன் செல்ல வெண்டுமா? என்பதைத்தான் பிசிசிஐ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு.
உலகக் கோப்பை தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதற்குள் இந்த கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்காது என பிசிசிஐ இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இருந்தபோதிலும், டி20 கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்காலம் குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அவர்கள் முடிவுக்கே விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை 2024 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறோம் என்று இருவரும் தெரிவித்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிசிசிஐ ஆராயும். இதில் பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லை என்றால், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ரோகித் சர்மா 148 போட்டிகளில் 140 இன்னிங்சில் 4 சதம், 29 அரைசதங்களுடன் 3863 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.32 ஆகும்.
விராட் கோலி 115 டி20 போட்டிகளில் 107 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.73 ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்