செய்திகள்

இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி

Published On 2018-08-03 15:58 GMT   |   Update On 2018-08-03 15:58 GMT
இலங்கை நாட்டுக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். #SriLanka #IndrajitCoomaraswamy #China
கொலும்பு:

இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் இந்திரஜித் குமாரசாமி அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இலங்கைக்கு சீனா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கடனுக்கு சுமார் சீன வங்கி சுமார் 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் தெரிவித்த இந்திரஜித் குமாரசாமி, அதில் 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இலங்கைக்கு சீனா 1 பில்லியன் டாலர் கடன் உதவி அளித்துள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #SriLanka #IndrajitCoomaraswamy  #China
Tags:    

Similar News