செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலச்சரிவு - 10 பேர் பலி

Published On 2018-07-12 10:24 GMT   |   Update On 2018-07-12 10:24 GMT
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் :

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பஞ்சசீர் மாகாண மலைகளில் உறைபனி ஏரி அமைந்துள்ளது. இதில் உள்ள பனி உருகி ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியாகிய காரணத்தால் இன்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் மீட்பு  பணிகளில் ஈடுபட மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் பேரிடர் மேலாண்மைத்துறை செய்தித்தொடர்பாளர் ஓமர் முகமதி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Tags:    

Similar News