செய்திகள்

பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு - இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

Published On 2018-06-18 20:34 GMT   |   Update On 2018-06-18 20:34 GMT
பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #Sushmaswaraj #EmmanuelMacron

பாரீஸ்:

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

இந்த பயணத்தின் முதல்கட்டமாக நேற்று இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்தும், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, இத்தாலியில் புதியதாக பிரதமர் பொறுப்பேற்ற கியூசெப்பி கான்ட்டேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 



அதைத்தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவரை அந்நாட்டுக்கான இந்திய தூதர் வரவேற்றார். அதன்பின் அங்கு நடைபெற்ற இந்திய கலாச்சார மையத்தின் பெயர் மாற்றும் விழாவில் சுஷ்மா கலந்து கொண்டார். பாரீசில் உள்ள இந்திய கலாச்சார மையம், விவேகானந்தர் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #Sushmaswaraj #EmmanuelMacron
Tags:    

Similar News