செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு 11 பேர் பலி

Published On 2018-04-24 10:30 GMT   |   Update On 2018-04-24 10:30 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghan
காபுல்:

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் 18 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஃபரா மாகாணத்தில் சோதனைச்சாவடி மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கஸ்னி மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது நடந்த தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சோத்னைச்சாவடியில் இரு போலீசாரை சுட்டுக்கொன்ற தலிபான் பயங்கரவாதிகள் 6 போலீசாரை சிறைபிடித்து சென்றுள்ளனர்.
Tags:    

Similar News