செய்திகள்

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை

Published On 2018-02-21 10:08 GMT   |   Update On 2018-02-21 10:08 GMT
சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட 3 இந்தியர்களுக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Indiansjailed #Singapore
சிங்கப்பூர்:

கடுமையான சட்டங்களை கொண்ட சிங்கப்பூர் நாட்டில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் மற்றும் பிரம்படி கொடுக்கவும் சட்டத்தில் இடமுண்டு.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் தனது நண்பர்களுடன் சுற்றிகொண்டிருந்த 13 வயது சிறுமியை சந்தித்த 3 இந்தியர்கள் அவரது விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 14 வயதை அடையாத பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இந்தியாவை சேர்ந்த கில் குஜ்ரந்த் சிங்(25), சுர்ஜீத் சிங்(29) ஆகியோருக்கு தலா 15 மாத சிறை தண்டனையும், ஜுக்ராஜ் சிங்(33) என்பவருக்கு 8 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews #Indiansjailed #Singapore
Tags:    

Similar News