செய்திகள்

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சீன சிறுவன் - 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்

Published On 2018-01-20 07:34 GMT   |   Update On 2018-01-20 07:34 GMT
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் குங்பூ பாணியில் மெழுகுவர்த்தியை அணைக்க முயன்ற போது ஏற்பட்ட தீ பரவி 40 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
பீஜிங்:

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் தற்காப்பு கலையான குங்பூ மீது மிகவும் ஆர்வம் கொண்டிருந்தான். குங்பூ படங்களில் வருவது போல கடந்த சில தினங்களுக்கு முன் தீயை கையால் அணைக்க முயற்சி செய்தான். பார்க்கிங்கில் உள்ள இருசக்கர வாகனம் மீது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தி அதனை குங்பூ பாணியில் அணைக்க முயன்றான். தீ அணையாததால் அதிருப்தி அடைந்த சிறுவன் மெழுவர்த்தியை அணைக்காமல் சென்று விட்டான்.

இந்த தீ பரவி பார்க்கிங்கில் இருந்த 40 இருசக்கர வாகனங்களை எரித்து நாசமாக்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் 9.5 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்தினர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். சிறுவன் விளையாட்டாக செய்த காரியம் விபரீதமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News