செய்திகள்

பாகிஸ்தானில் பணத்துக்காக இந்து சகோதர்கள் சுட்டுக்கொலை

Published On 2018-01-05 10:38 GMT   |   Update On 2018-01-05 10:38 GMT
பணம் தரமறுத்ததால் இந்து சகோதரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #pakistan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பர்கர் மாவட்டத்தில் மித்தி பகுதியில் தானிய கடை வைத்திருப்பவர்கள் திலிப்குமார் மற்றும் சந்தர் மகேஸ்வரி.
 
இவர்கள் இன்று காலை பொருள்கள் வாங்குவதற்காக கடையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் 
வந்த நபர்கள் அவர்களிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் உஷாராகி பணத்தை தரமறுத்தனர்.

இதையடுத்து, பைக் ஆசாமிகள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் அந்த சகோதரர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்து, பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பணத்தை தரமறுத்த இந்து சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த வணிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #pakistan #tamilnews
Tags:    

Similar News