செய்திகள்

பிலிப்பைன்ஸ்: கய்-டக் புயலால் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி

Published On 2017-12-17 10:52 GMT   |   Update On 2017-12-17 10:52 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பில்ரியான் தீவை தாக்கிய கய்-டக் புயலால் உண்டான கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பில்ரியான் தீவை நேற்று குறைந்த அழுத்தத்துடன் கூடிய வெப்பமண்டல புயல் தாக்கியது.

கய்-டக் என பெயரிடப்பட்ட புயலால் உண்டான கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்ததாக தீவு பகுதியான பில்ரியான் மாகாண கவர்னர் கெரார்டோ எஸ்பினா இன்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News