செய்திகள்

சீனாவில் ரூபாயை சாப்பிட கொடுத்தவரின் கைவிரலை கடித்து தின்ற புலி

Published On 2017-11-25 05:06 GMT   |   Update On 2017-11-25 05:09 GMT
சீனாவில் ரூபாயை சாப்பிட கொடுத்தவரின் 2 விரல்களை புலி கடித்து தின்று விட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்:

சீனாவில் ஹெனான் மாகாணம் ஜின்ஷியுவான் நகரில் சர்க்கஸ் நடை பெறுகிறது. அதில் சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு பய் என்ற 65 வயது முதியவர் சென்று இருந்தார். அங்கு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்கம் மற்றும் புலியை வேடிக்கை பார்த்தார்.

அப்போது விளையாட்டாக அவற்றுக்கு ரூபாய் நோட்டுகளை சாப்பிட கொடுத்தார். புலி ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு மென்று தின்று விட்டது.

அதன் பின்னர் புலி கூண்டுக்குள் சென்றார். புலியிடம் அதேபோன்று ரூபாய் நோட்டை சாப்பிட கொடுத்தார். ஆனால் எதிர் பாராத விதமாக புலி அவரது வலது கை விரல்களை கடித்தது.

இதனால் அவர் வேதனை தாங்காமல் அலறி துடித்தார். உடனே சர்க்கஸ் கம்பெனி ஊழியர்கள் விரைந்து வந்து புலியை இரும்பு கம்பியால் குத்தினர். அதன்பின்னர் அவரை விடுவித்தது. இருந்தும் அவரது 2 விரல்களை புலி கடித்து தின்று விட்டது. இக்காட்சி ‘வீடியோ’ வைரல் ஆக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News