செய்திகள்

சவுதி அரேபியா: தச்சுப் பட்டறை தீ விபத்தில் 10 பேர் பலி

Published On 2017-10-15 10:02 GMT   |   Update On 2017-10-15 10:02 GMT
சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத் நகரில் உள்ள ஒரு தச்சுப் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்துபேர் உயிரிழந்தனர்.
ரியாத்:

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத் அருகேயுள்ள பட்ர் மாவட்டத்தில் உள்ள தச்சுப் பட்டறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த மரங்கள் மற்றும் இதர பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கட்டுக்கடங்காமல் பரவிய தீயில் சிக்கி பத்துபேர் உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags:    

Similar News