செய்திகள்
பிரேசிலில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி 35 ஆயிரம் பேர் பேரணி - அரசு அலுவலகங்களுக்கு தீவைப்பு
பிரேசிலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் 35 ஆயிரம் பேர் பேரணியில் ஈடுபட்டனர். கூட்டத்தில் சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அலுவலகத்துக்கும் தீ வைத்தனர்.
பிரேசிலியா:
பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆனால் அவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தலைநகர் பிரேசிலியாவில் மாபெரும் பேரணி நடந்தது. அதில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வேளாண் அமைச்சக அலுவலகத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அலுவலகத்துக்கும் தீவைத்தனர். அதே போன்று மற்ற அமைச்சக அலுவலகங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.
போலீசார் மீது கற்களும் வீசப்பட்டன. இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. எனவே கூட்டத்தை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆனால் அவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தலைநகர் பிரேசிலியாவில் மாபெரும் பேரணி நடந்தது. அதில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அப்போது அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வேளாண் அமைச்சக அலுவலகத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அலுவலகத்துக்கும் தீவைத்தனர். அதே போன்று மற்ற அமைச்சக அலுவலகங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.
போலீசார் மீது கற்களும் வீசப்பட்டன. இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. எனவே கூட்டத்தை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.