தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காணலாம். 

மதுரையில் இருந்து 540 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது அம்பலம்: கைதான 2 பேரிடம் தீவிர விசாரணை

Published On 2023-12-12 04:39 GMT   |   Update On 2023-12-12 04:39 GMT
  • காரில் ஏராளமான சாக்கு மூட்டைகளில், கஞ்சா இருப்பது தெரியவந்தது.
  • கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை பெரியசாமி புரம் பகுதியில் சூரங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மதுரையில் இருந்து வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் வேம்பார் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி தலைமையிலான போலிசார் அந்த காரை துரத்தி சென்று சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

அப்போது காரில் ஏராளமான சாக்கு மூட்டைகளில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த தர்மேந்திரன், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த சிவராஜ் ஆகிய 2 பேரை பிடித்து சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் மதுரையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அதனை அவர்கள் படகு மூலமாக இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதும், சாக்கு மூட்டைகளில் மொத்தம் 540 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

இக்கடத்தல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News