தமிழ்நாடு

காவல்துறை, போக்குவரத்துத் துறை பனிப்போர்- ஈபிஎஸ் கண்டனம்

Published On 2024-05-25 10:14 GMT   |   Update On 2024-05-25 10:14 GMT
  • காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவல்துறை, போக்குவரத்து துறை இடையே நடைபெற்று வரும் பனிப்போரை தடுக்க தவிறய தமிழக அரசை கண்டிக்கிறேன்.

சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவித்தபடி காவலர்களுக்கு இலவச பயணத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இதனால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரைப்பட காமெடியில் வருவதை போல இரண்டு துறையில் எது பெரியது என அடித்து காட்டுங்கள் என்ற மனநிலையில் இரு துறைகளும் செயல்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News