தமிழ்நாடு

மதுரை அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு- மருத்துவர் சஸ்பெண்ட்

Published On 2022-06-10 07:24 GMT   |   Update On 2022-06-10 07:24 GMT
  • அமைச்சருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.
  • மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த 7 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதையொட்டி மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வாழப்பாடி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.

ஆய்வின்போது, ஆரம்ப சுகாதார மையத்தில் பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News