தமிழ்நாடு

வெள்ள பாதிப்பை கையாண்ட விதம் தவறு... அரசை சாடிய அண்ணாமலை

Published On 2023-12-16 07:19 GMT   |   Update On 2023-12-16 07:19 GMT
  • வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும்.
  • பா.ஜ.க. வளர்ந்துவிட்டது என்பதால் எங்களை குறை கூறுகிறார்கள்.

சென்னை:

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* பேரிடரின் போது ஆய்வுக்கு வரும் மத்திய குழுவினர் மாநில அரசை குறை சொல்ல மாட்டார்கள்.

* தமிழக அரசின் தவறை முதலமைச்சர் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

* வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு.

* மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை என்பது கஷ்டத்தில் பங்கு கொள்ள மட்டுமே.

* வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும்.

* பா.ஜ.க. வளர்ந்துவிட்டது என்பதால் எங்களை குறை கூறுகிறார்கள்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Tags:    

Similar News