தமிழ்நாடு

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்கலாம்

Published On 2024-05-01 09:32 GMT   |   Update On 2024-05-01 09:32 GMT
  • அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறப்பதற்கு தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
  • தண்ணீர் பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறப்பதற்கு தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் எந்த ஆட்சேபனையும் இல்லை. எந்த ஓர் அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன் பெறக்கூடாது.

தண்ணீர் பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

 

எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம்.

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News