தமிழ்நாடு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது- ராகம் சவுந்தரபாண்டியன்
- கவர்னரின் ஒப்புதலோடு நிரந்தர சட்டம் நிறை வேற்றப்படும் என்று நம்புகிறோம்.
- கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு இனி இந்த சட்டத்தின் மூலம் முடிவு கட்டப்படும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
சென்னை:
இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரின் ஒருமித்த ஆதரவோடு மீண்டும் இயற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை கவர்னரின் ஒப்புதலோடு நிரந்தர சட்டம் நிறை வேற்றப்படும் என்று நம்புகிறோம். மக்கள் நலனில் அக்கறையும், நிர்வாகத் திறனும் மிக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்படும் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு இனி இந்த சட்டத்தின் மூலம் முடிவு கட்டப்படும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.